இன்றைய பஞ்சாங்கம் மார்ச் 29- வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி~ 16 (29.3.2024) வெள்ளி கிழமை.
வருடம் ~ சோபக்ருத்
{சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { *மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 6.18 pm வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 6.39 pm வரை விசாகம் பின் அனுஷம்
யோகம் ~ வஜ்ரம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.15
சந்திராஷ்டமம் ~ 12.22 pm வரை மீனம் பின் மேஷம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 22.03.2024
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பொருளாதாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : வாதங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : மந்தமான நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். புதிய நபர்களிடத்தில் கனிவுடன் பழகவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகளால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : கனிவு வேண்டும்.
மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகளை மேம்படுத்திவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
திருவாதிரை : வசதிகள் மேம்படும்.
புனர்பூசம் : திருப்பங்கள் உண்டாகும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையை கையாளவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூசம் : ஆர்வமின்மையான நாள்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய வேலைக்கான வாய்ப்பு ஏற்படும். புதிய மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பணிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : விவாதங்கள் நீங்கும்.
பூரம் : வாய்ப்பு ஏற்படும்.
உத்திரம் : மதிப்பு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.
அஸ்தம் : தனவரவுகள் உண்டாகும்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் விலகும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். கணிதம் சார்ந்த துறைகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
சித்திரை : நட்பு விரிவடையும்.
சுவாதி : துரிதம் உண்டாகும்.
விசாகம் : அத்தியாயங்கள் பிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
தனவரவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.
அனுஷம் : அனுபவம் கைகொடுக்கும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். கனிவான பேச்சுக்களால் பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : கவலைகள் நீங்கும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
திருவோணம் : மதிப்பு மேம்படும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
தொழில் அபிவிருத்தி சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகளை புரிந்து கொள்வீர்கள். மனதில் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
சதயம் : நெருக்கடியான நாள்.
பூரட்டாதி : பயணங்கள் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
விவேகமான செயல்பாடுகளின் மூலம் நன்மதிப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : மதிப்பு ஏற்படும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
à®…à®°à¯à®®à¯ˆ. பகà¯à®•à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ பகà¯à®•à®®à¯ படிகà¯à®•à¯à®®à¯ ஆவலைத௠தூணà¯à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. உஙà¯à®•à®³à¯ தினசரி வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯. ஆணà¯à®Ÿà®¾à®³à¯ திரà¯à®µà®Ÿà®¿à®•à®³à¯‡ சரணமà¯.
Good.
à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© பதிவà¯à®•à®³à¯
Very nice
சரி யான நெதà¯à®¤à®¿à®¯à®Ÿà®¿
Crisp presentation of recent news.