spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகல்விபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

- Advertisement -

சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், விருதுநகர் மாவட்டம் 98.55 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றது.

கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 94,167 மாணவ, மாணவியர்கள் தேர்வுகளை எழுதினர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் போலவே, பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் அறிவிக்கப்படாமல், கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது,.

இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது.

451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது.

426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது.

401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது.

301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 92.5% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 96.2% மாணவர்களை விட மாணவிகளை இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.8% கூடுதல் ஆகும். 5059 பள்ளிகள் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 5059 பள்ளிகளில் 1557 அரசு பள்ளிகள் அடங்கும்.

விருதுநகர் மாவட்டம் முதலிடம்

98.55% தேர்ச்சி பெற்று தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.59 ஆக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது.

* தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம்
பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
* கன்னியாகுமரி மாவட்டம் 2-வது இடம்- 98.17% தேர்ச்சி
* ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடம்- 98.16% தேர்ச்சி
* ஈரோடு மாவட்டம் 4-வது இடம்- 97.97% தேர்ச்சி
* தூத்துக்குடி மாவட்டம் 5-வது இடம்- 97.16% தேர்ச்சி

பாட வாரியாக 100க்கு 100

* தமிழ் பாடத்தில் 69 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* கணக்கு பாடத்தில் 13759 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* அறிவியல் பாடத்தில் 17481 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
* சமூக அறிவியல் பாடத்தில் 61,115 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர்.
* ஆங்கிலப் பாடத்தில் யாரும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை.

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 லட்சம் மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போனுக்கு முடிவு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவு தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் குறிப்பிட்டு கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு உடனே அனுப்பி வைக்கப்படும். தனித் தேர்வர்களும் செல்போனில் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வு முடிவுகளை
https://www.tnresults.nic.in,
https://www.dge1.tn.nic.in,
https://www.dge2.tn.nic.in இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe