spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்செங்கோட்டை - தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!

செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!

- Advertisement -

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு பகல் நேர பயணிகள் ரயில் தாற்காலிகமாக விழாக் காலத்தை முன்னிட்டு இயக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் தாம்பரம்-செங்கோட்டை இடையே இயக்கப்பட்ட சிறப்பு பகல் நேர ரயிலை தொடர்ந்து தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை பயணிகள் ரயில் வாரத்திற்கு 5 நாள்கள் தஞ்சாவூர் மானாமதுரை ராஜபாளையம் வழியாக கடந்த 3 மாதங்களாக இயக்கப்பட்டது. இந்த ரயில் பகல் நேரத்தில் இயக்கப்பட்டதால் பயணிகளிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. தாம்பரம்- செங்கோட்டை ரயில் தினசரி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அட்டவணையில் அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால், கடந்த மாதம் வரை வாரத்திற்கு 5 நாள்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் இந்த மாதம் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி தாம்பரம்-செங்கோட்டை ரயிலை அட்டவணையில் அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe