கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 23 முறை போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
மேலும் அவர் கூறியபோது….
- 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை என்ற தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது…
*ஊதிய உயர்வில் போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிற்சங்கங்கள் தவறாக வழிநடத்துகின்றன.
*அரசு ஊழியர்களுக்கு இணையாகவே போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு
*பேச்சுவார்த்தை நடத்துவதில் தமிழக அரசு கவுரவம் பார்க்கவில்லை, போக்குவரத்து தொழிலாளர்களே கவுரவம் பார்க்கின்றன.
*கடுமையான நிதி நெருக்கடியிலும் 1,250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது .
*நீதிமன்றம் உத்தரவிட்டதுபோல, தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.