சென்னை:
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி சங்கரன் உடல் நலக் குறைவால் காலமானார்.
64 வயதான எழுத்தாளர் ஞாநி சங்கரன் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவராகத் திகழ்ந்தார்.
அண்மைக் காலமாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் திங்கள்கிழமை இன்று அதிகாலை காலமானார். கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப் பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது பின்னர் அவரது உடல் மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.