தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அங்குள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியது. இதனால் வைகைக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மழைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.