நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கேரளா லாட்டரி விற்பனை அமோகமாக நடை பெறுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த லாட்டரி ஒழிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு திட்டம். அவர் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் இல்லாவிட்டாலும் கேரள லாட்டரி செங்கோட்டை தெங்காசி பகுதியில் கடும் விற்பனையை துவக்கி இருக்கிறது
பல குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வரும், தடை செய்யப்பட்ட லாட்டரி வியாபாரத்தை காவல்துறை கண்டுகொள்வது போல் தெரியவில்லை என மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
காவல்துறை லாட்டரி வியாபாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.