சேலம் கோட்டத்தில் 19ஆம் தேதி முதல் 3 ரயில்நிலையங்கள் மூடப் படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் கோட்டத்தில் குறைந்த பயன்பாடுள்ள 3 ரயில்நிலையங்கள் மூடப்படுகின்றன. 19ஆம் தேதி முதல் 3 ரயில் நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம்- கரூர் மார்க்கத்தில் புதுசத்திரம் மற்றும் லட்டிவாடி ரயில் நிலையங்கள் மூடப்படுகின்றன. மேலும் கரூர்- திருச்சி தடத்தில் உள்ள மேக்குடி ரயில்நிலையமும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மூடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் வருகை இந்த ரயில் நிலையங்களில் குறைந்துள்ளதால் மூடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளதால் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக கூறப்படுகிறது.