சார் நீங்க ரொம்ப நல்லவருதானே…!
அப்டியா சொல்றீங்க?
பாத்தா அப்டித்தான் சார் தெரியுது!
இல்லயே! நான் பேஸ்புக்ல எழுதறத பாத்து நான் ரொம்ப கோவக்காரன், அதுவும் முன்கோவக்காரன், முசுடுன்னுதானே எல்லாஞ் சொல்றாங்க…!
அது அதுல சார்… நான் சொல்றது இதுல சார்…!
ஓ.. அது இதுன்னு எப்டியோ சொல்றீங்க… சரி விஷயம் என்னான்னு சொல்லுங்க…!
இல்ல… இன்னிக்கு உங்களுக்கு பாஜக., தலைவர் அழைப்பு விடுத்திருக்காரே… அதான் சொன்னேன்!
என்னன்னு…?
நல்லவங்கள்லாம் பாஜக.,வுல சேரணும்; அவங்களை வரவேற்கிறேன்னு சொல்லியிருக்காரே… அந்த நல்லவங்கள்ல நீங்களும் ஒருத்தர்தானேன்னு அப்டிக் கேட்டேன்.
அடடா… நான் நல்லவன்னு உங்கள மாதிரி நண்பர்களுக்கு தெரியறதே இந்த மாதிரி எந்தக் கட்சியிலயும் இல்லாததுனாலதானே…! என்னையும் அப்டி இப்டி ஆக்கணும்னு நினைக்கிறீங்களா?
அதில்ல சார்… ஆனா…
சரி சரி.. நீங்க சொல்றத நான் ஒப்புக்கிறேன். நான் பாஜக., சேர தயார்… ஆனா ஒரு கண்டிஷன்!
என்ன சார்..?
எனக்கு முதல்வர் போஸ்ட் கன்பர்ம் பண்ணனும்! அப்டின்னா நான் பாஜக.,வுல சேர்றேன்.
சார்… என்ன விளையாடறீங்களா?
ஏன் சார் நான் போய் விளையாடப் போறேன். நாட்டுல சிஸ்டம் ரொம்ப கெட்டுப் போய்க் கிடக்கு சார். அதை க்ளீன் பண்ணனும்னா எவ்ளோ உழைக்கணும். நாட்டுக்காக சேவை பண்றதுக்காகத்தான் நானே … ரொம்ப யோசிச்சி… சரி வரேன்னு சொல்றேன். அதுக்கு போய் நீங்க யோசிச்சீங்கன்னா..?
இல்ல… இருந்தாலும் நீங்க சீரியஸா பேசறீங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!
அட … பாருங்க! நீங்கதான் என்னை நல்லவன்னு சொன்னீங்க ! அதான் சொல்றேன். என்னைத் தவிர கெட்டுப் போய்க் கிடக்குற சிஸ்டத்தை க்ளீன் செய்ய வேற யாரும் கிடையாது…! அதனால அத ஏன் நீங்க யோசிச்சி பாக்க மாட்டேன்றீங்க…!
சர்தான்.. ஆனா… இது ரொம்ப ஓவர்!
பாருங்க.. அதான் சொன்னேன். நான் எந்தக் கட்சி ஆபீஸ் பக்கம் கூட வர்றதுக்கு லாயக்கில்லாதவன்னு…! இனி இப்பிடி ஒரு தடவ கேட்டுட்டாதீங்க…
….???