திருப்பதியில் வழக்கமான உத்ஸாகத்துடன் பிரம்மோத்ஸவம் இனிதே துவங்கி நடைபெற்று வருகிறது….
இந்த வருட பிரம்மோத்ஸவ விழாவில்,
முதல் நாள்: செப்.23 பகல்: கொடியேற்றம், இரவு:பெரிய சேஷவாகனம்
இரண்டாம் நாள்: செப்.24 (ஞாயிறு) காலை: சின்ன சேஷ வாகனம், இரவு : ஹம்ஸ வாகனம்
மூன்றாம் நாள்: செப்.25 (திங்கள்) காலை: சிம்ம வாகனம், இரவு : முத்துப் பந்தல் வாகனம்
நான்காம் நாள்: செப்.26 (செவ்வாய்) காலை: கற்பக விருட்ச வாகனம், இரவு : சர்வ பூபால வாகனம்
ஐந்தாம் நாள்: செப்.27 (புதன்) காலை : மோகினி அலங்காரம், இரவு : கருட வாகனம்
ஆறாம் நாள்: செப்.28 (வியாழன்) காலை: ஹனுமத் வாகனம், மாலை : தங்க ரதம், இரவு : யானை வாகனம்
ஏழாம் நாள்: செப்.29 (வெள்ளி) காலை : சூர்ய பிரபை வாகனம், இரவு : சந்திர பிரபை வாகனம்
எட்டாம் நாள்: செப்.30 (சனி) காலை : திருத்தேரில் பவனி, தேரோட்டம். இரவு : குதிரை வாகனம்
ஒன்பதாம் நாள்: அக்.1 (ஞாயிறு) காலை : சக்ர ஸ்நானம், மாலை : கொடியிறக்கம் விழா நிறைவு.