Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் 12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்? பரிகாரங்கள் என்ன?

12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்? பரிகாரங்கள் என்ன?

gurupeyarchi-2020
gurupeyarchi 2020

குருப்பெயர்ச்சி.- வருகின்ற நவம்பர் மாதம் பதினைந்தாம் தேதி ஐப்பசி 30ம்நாள் ஞாயிறு அன்று இரவு 9.30 மணிக்கு தனுசிலிருந்து மகரராசிக்கு குரு பிரவேசிக்கப் போகிறார்.

கல்வியைக் கொடுப்பவர் புதன் என்றால் அறிவைக் கொ டுப்பவர் குரு. புத்திசாலியாக இருக்க வேண்டு மென்றால் குரு சிறப்பாய் இருக்க வேண்டும்.குருவை புத்தி காரகன் என்றால் புத்திரகாரகனும்கூட. குரு அறிவுக்கு மட்டும் காரணகர்த்தா அல்ல வேறு சில விஷயங்களுக்கும் காரண கர்த்தாவாகிறார்.

ஒருவருக்கு நிறைய பணத்தை கொடுப்பவரும் குருதான்.அதனால்தான் தனகாரகன் என்றழைக்கப்படுகிறார். ஒருவர் சமுதாயத்தில் மதிக்கப் படுகிறார் என்றால் குருதான் காரணம்.

ஆசிரியர், நீதிபதி, வழக்கறிஞர், குருமார்கள், ஆன்மீகவாதிகள் ஆகியோருக்கு கர்த்தா குருதான். நாட்டை ஆளும் உயர்பதவிகளுக்கும் குருதான் காரணமே.  நாட்டைஆளவைப்பார் நல்லோருடன் சேரவைப்பார். 

குரு பார்வை கோடி நன்மை என் சொல்லிற்கு ஏற்ப இந்த குருப்பெயர்ச்சி ஒருசில ராசிக்கு சிறப்பாக இருக்கும்.ஜாதகமாகட்டும் ,பெயர்ச்சியாகட்டும் 2,5,7,9,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும்பொழுது சிறப்புதான். குரு கோச்சாரத்தில் எங்கு இருக்கிறார் என்பதை பொறுத்தே பலன் உண்டு.  

Dhinasari Jothidam ad

12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம். 

மேஷம்: 

காலபுருஷனுக்கு ஒன்றாம் வீடு மேஷம் இந்த மேஷராசிக்கு பெயர்ச்சி எப்படி இருக்கும்.  ராசிக்கு இதுவரை ஒன்பதில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு. பெயர்ச்சிக்கு பிறகு பத்தாமிடம் செல்வது உகந்த இடமல்ல. தொழில் மாற்றம் உத்யோகத்தில் சில பிரச்சனை ஆகுதல். இடையூறு போன்றவைகளை சந்திக்க வேண்டிய வரும். 

ரிஷபம்:

காலபுருஷனுக்கு இரண்டாமிடம் ரிஷபம். ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு, பெயர்ச்சிக்கு பிறகு ஒன்பதாம் இடத்திற்கு செல்வது சிறப்புதான்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆன்மீகப் பணியில் ஈடுபடுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். மகர ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார். இந்த பெயர்ச்சி ரிஷபராசிக்கு பொன்னான காலம் என்றே கூறலாம்.

மிதுனம்

காலபுருஷனுக்கு மூன்றாமிடமாகிய மிதுனம் தைரியஸ்தானம் . ராசிக்கு இதுவரை ஏழில் இருக்கும் குரு,  பெயர்ச்சிக்கு பிறகு எட்டாமிடம் செல்வது நல்லதல்ல. காரியத்தடை ,பொருளாதார நெருக்கடி, தொழில் மந்தம், உடல்நலம் பாதிப்பு, கடன்தொல்லை, எடுத்த காரியம் தோல்வியில் முடியும்.

கடகம்

காலபுருஷனுக்கு நான்காமிடம் கடகம் மாத்ரூ ஸ்தானம் சுக ஸ்தானம் கடகம் ராசிக்கு இதுவரைஆறில் சஞ்சரிக்கும் கு்ரு பெயர்ச்சிக்கு பிறகு ஏழாமிடம் செல்வது சிறப்புதான். தடைகள் அகன்று வெற்றிமேல் வெற்றி கிட்டும் கூட்டுத்தொழில் அமோக லாபம் கிடைக்கும்.சொத்து சேர்க்கை ஏற்படும். வெளியூர்களுக்கு பயணம் செல்வார்கள். மணமாகதவர்களுக்கு நல்ல வரன் அமையும். மகர ராசியிலிருந்து ஏழாம் பார்வையாக பார்க்கிறார்  அதுவே சிறப்புதான்.

சிம்மம்

காலபுருஷனுக்கு ஐந்தாமிடம் சிம்மம் பூர்வபுண்ணியஸ்தானம் ஐந்தாமிடத்தில் இருக்கும் குரு  சிறப்பு தான் பெயர்ச்சிக்கு பிறகு ஆறாமிடத்தில் சஞ்சரிக்கிறார்.  டென்ஷன்  ஏற்படும். எதிரி உண்டு, நோய் உண்டு ஆரோக்கியம் கெடும்.  வீண் பழிக்கு ஆளாவர். கடன் தொல்லை ஏற்படும்.

கன்னி

கால புருஷனுக்கு ஆறாமிடம் கன்னி சத்துரு ஸ்தானம் ராசிக்கு இதுவரை நான்கிலே வீற்றிருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு ஐந்தில் பிரவேசிக்கப்போவது சிறப்பு. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்லவரன் அமையும், குழந்தைகளால் மகிழ்ச்சி , புதிய முயற்சிகளில் வெற்றி, அரசு வழியில் ஆதாயம் ஏற்படும்.

துலாம்

காலபுருஷனுக்கு ஏழாமிடம் களத்திரஸ்தானம் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசி நீதிக்கும் நேர்மைக்கும் பெயர்போனது. துலாம் ராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் இருக்கும் குரு., பெயர்ச்சிக்கு பிறகு நான்காமிடத்தில் வருகின்ற குருவால் இடமாற்றம் வெளியூர் மாற்றம், உத்யோக மாற்றம் ஏற்படவாய்ப்பு. 

விருச்சிகம்

காலபுருஷனுக்கு எட்டாமிடம் ஆயுள் ஸ்தானம் ஞானத்தின் திறவுகோல்  ஆகிய விருச்சிகம். ராசிக்கு இதுவரை இரண்டில் இருந்த குரு நன்மைகள் செய்தது சிறப்புதான். பெயர்ச்சிக்கு பிறகு மூன்றாமிடம் செல்வது சிறப்பல்ல.பொருளாதார நெருக்கடி, புதியமுயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படும்.

தனுஷ்

காலபுருஷனுக்கு ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய தனுசு ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு.பெயர்ச்சிக்கு பிறகு இரண்டாம் இடத்திற்கு வரும் குரு  நல்லதை செய்வார் தனம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு சேரும். பணம் நிறைய வரும்.

மகரம்

காலபுருஷனுக்கு பத்தாமிடம் மகரம் கர்ம ஸ்தானம் தொழில் ஸ்தானம்

ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு ஜென்மத்திற்கு வருவது நல்லதல்ல உடல்நலம் பாதிக்கும் அலைச்சல் அதிகரிக்கும்.குழம்பிய மனதோடு பல காரியங்களை செய்யத் தூண்டும்.

கும்பம்

காலபுருஷனுக்கு பதினொன்றாமிடம் கும்பம் லாபஸ்தானம். ராசிக்கு பதினொன்றில் சஞ்சரித்து வந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு பன்னிரெண்டில் வரும் குரு நிறைய பணம் விரயம் ஆகும். தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்வது. டென்ஷன் அதிகரிக்கும். எதைத் தொட்டாலும் தடைஏற்படும்.

மீனம்

காலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் இடம் விரயஸ்தானம் மோட்ச ஸ்தானம் ராசிக்கு இதுவரை பத்தாமிடத்தில் இருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு பதினொன்றில் வருவது லாபம் ஏற்படும் சிறப்புதான். அனுகூலமாக இருக்கும்.

பலனைப் பார்த்தோம் இனி பரிகாரத்தையும் பார்ப்போமே!

ஒருவருடைய ஜாதகத்தில் குரு சரி இல்லாவிட்டாலும் சரி பெயர்சியின் பலன் சரி இல்லையென்றாலும் குருவின் ஸ்தலமான ஆலங்குடிக்கு செல்வது சிறப்பாய் இருக்கும். அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்துவர 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது உத்தமம்.

எல்லோரும் விரும்பும் இடம் குரு ஸ்தலமான திருச்செந்தூர் சென்றும் கடலாடி செந்தூர்கடவுள் முருகனை வணங்கியும் வரலாம் அன்னதானமும் செய்துவர குருவின் அருளுக்கு பாத்திரமாகலாம்.

ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சிவாலயம் சென்று அங்குள்ள தட்சணாமூர்த்தியை வணங்கி வர உத்தமம்.

நவக்கிரகங்களில் வியாழ பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வர உத்தமம். சித்தர் சமாதியை வணங்கி வர உத்தமம். கோயில்களுக்கு கொண்டைக்கடலை வாங்கி கொடுக்கலாம்.

அடுத்து முக்கியமான பரிகாரம்.

மேஷ ராசிக்காரர்கள் வியாழக்கிழமை இரவு பத்து கைஅளவு கொண்டைக் கடலை எடுத்து தலையனைக்கு கீழ் வைத்து மறு நாள் எடுத்து ஒடுகிறதண்ணீரில் போட்டுவிட குருவின் அருள் கிடைக்க ஏதுவாகும்.10 எண்ணம்கொண்டைக் கடலை எடுத்துக்கொள்ளலாமே.

மிதுனம் 8 கொண்டைக் கடலை அல்லது 8 கையளவு எடுத்து இரவு தூங்கும் பொழுது தலையணைக்கு கீழ் வைத்து மறுநாள் காலையில் ஓடுகிற தண்ணீரில் போட்டுவிட உத்தமம். 

சிம்மம் 6 கையளவு கடலை எடுத்து மேல்கூறியது போல் செய்யவும்.

துலாம் 4 கையளவு கடலை
விருச்சிகம் 3 கையளவு கடலை
மகரம் ஒரு கையளவு கடலை
கும்பம் 12 கையளவு அல்லது 12 எண்ணம் கடலை எடுத்து பேப்பரில்  மடித்து தலையனைக்கு கீழ் வைத்து மறுநாள் காலையில் எடுத்து  ஓடும் தண்ணீரில் விடவும். இந்த பரிகாரத்தை  வியாழன் தோறும் செய்துவர உத்தமம். வியாழக்கிழமை தோறும் விநாயகரை 16 முறை வலம் வர உத்தமம். முக்கியமாக அருகம்புல் சாற்றுதல் அவசியம்.

ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் குரு இருக்கும் அமைப்பை பொறுத்து பலன் அமையும். நடைபெறும் தசாவைப் பொறுத்தும் பலன் அமையும்.

அகத்தியா ஜோதிடர்,
ராஜஸ்ரீ ஜோதிடாலயம். இலத்தூர்,
தென்காசி மாவட்டம் (98437 10327)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version