Home ஜோதிடம் குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மிதுனம்

குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.

இதோ இந்த குரு பெயர்ச்சி, மிதுன ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…


மிதுன ராசி :

மிருகசீரிடம் 3,4, திருவாதிரை புனர்பூசம் 3ம் பாதம் முடிய

90/100

நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவரான மிதுனராசி அன்பர்களே!

நிம்மதி பெருமூச்சு விடலாம். காரணம் ஜென்மத்தில் இருக்கும் ராகு உடல் உபாதைகளை 6ல் குருவுடன் சேர்ந்து இதுவரை தந்திருப்பார் சனியும் பொருளாதார பாதிப்படி தந்திருப்பார் இந்த குரு பெயர்ச்சி நேர்மறை சக்திகளை தந்து வாழ்க்கையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை தருகிறது.

மேலும் பொருளாதாரத்தில் ஒரு உன்னத நிலையை தருகிறது, சமூகத்தில் அந்தஸ்து குடும்ப ஒற்றுமை மன நிம்மதி என்று எல்லாம் நன்றாக இருக்கும். சனி பகவான் ஜனவரி 2020ல் 8ம் இடம் பெயர்கிறார் இது கொஞ்சம் சறுக்கலை கொடுக்கும் ஆனால் அது கூட ஏப்ரலில் குரு 8ல் சஞ்சாரிக்கும் காலம் ஜூன் வரை கொஞ்சம் சிரமம் தான் இருந்தாலும் மற்ற கிரஹங்கள் மிக நன்றாக இருப்பதால் பெரிய கஷ்டம் ஏதும் வராது.

பல துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள் தொழிலில் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும் இதுவரை திருமணம் தடை பட்டோருக்கு திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியத்தை எதிர் பார்த்திருந்தவர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும், வீடு வாகன யோகங்கள் உண்டாகும், புனித யாத்திரைகள் செல்வீர்கள், விருந்து கேளிக்கைகளும் செல்வீர்கள். மகிழ்ச்சியை தரும் பெயர்ச்சி.

ஆரோக்கியம் :

ஜென்ம ராகுவும், 6ல் குருவும் உடல் உபாதைகளை தந்து கொண்டிருந்திருப்பார்கள் இனி, குரு 7ல் பெயர்ந்து ராகுவை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், குடும்ப அங்கத்தினர்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வைத்திய செலவுகள் குறைந்துவிடும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

இதுவரை இருந்துவந்த சிக்கல்கள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் கணவன் மனைவி நெருக்கம் உண்டாகும், பொருளாதார பிரச்சனைகள் மறையும், வேலை வேறு காரணங்களுக்காக பிரிந்தவர்கள் ஒன்றுகூடுவர் குடும்பத்துக்கு சமூக அந்தஸ்து உண்டாகும். உறவினர்களால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் :

புதிய வேலை, புதிய பதவி என்று நன்றாகவே தொடங்குகிறது இந்த குரு பெயர்ச்சி, உடன் வேலைசெய்பவர்கள் உதவுகிறார்கள், விரும்பிய இடமாற்றம் ஏற்படும், நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்தோருக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும், வெளிநாடு போன்று ஆசை பட்டவர்களுக்கு வாய்ப்பு வந்து ஆசை நிறைவேறும், மேலதிகாரிகள் அனுகூலமாக இருப்பார்கள், சம்பளம் பெருகுவதால் வசதிகளும் கூடும். உழைப்பதில் ஆர்வம் உண்டாகும்.

தொழிலதிபர்கள் / வியாபாரிகள் :

எதிரிகள் தொல்லை, அரசாங்கத்தினால் தொல்லை இவை எல்லாம் நீங்கி புதிய தொழில் விஸ்தரிப்பு, லாபம் என்று நன்றாகவே இருக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்போருக்கு எண்ணம் கைகூடும், வங்கி உதவிகள் தாராளமாக கிடைக்கும், தொழிலாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பை தருவர். வெளிநாட்டு/வெளியூர் பயணங்கள் லாபத்தை தரும். புதிய திட்டங்கள் நல்ல பலனை தரும். இரட்டிப்பு வருமானம் வரும். கூடுதல் நன்மையும் உண்டாகும்.

அரசியவாதிகள் :

மேலிட செல்வக்கு கூடும், புதிய பதவி அந்தஸ்து கிடைக்கும், தொண்டர்கள் ஆதரவு உண்டாகும், பணப்புழக்கம் தாராளம், ஆளும் கட்சியில் சேர்ந்தால் நன்மை உண்டாகும். வருகின்ற வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொள்வீர்கள், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை கொஞ்சம் கவனமாய் இருந்தால் வருடம் முழுவதும் நன்மையே.

கலைஞர்கள்:

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரவு தாராளம். புகழ் பாராட்டு கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். இருந்தாலும் வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது சக கலைஞர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விவசாயிகள் :

மகசூல் நன்றாக இருக்கும் சேமிப்பு கூடும். கால்நடையால் அதிக நன்மை உண்டகும். வழக்குகள் தீர்ந்துவிடும். புதித சொத்துக்கள் வாங்கும் எண்ணம் கைகூடும், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டகும். பணப்புழக்கம் தாராளம்.

மாணவர்கள் :

வெளிநாட்டு படிப்பு ஆசை நிறைவேறும், விரும்பிய பாடங்கள் கிடைக்கும், நல்ல நண்பர்களின் சேர்க்கை நன்மை தரும் ஆசிரியர்கள் பெற்றோர்களின் அனுகூலம் உண்டாகும், எல்லோருடனும் மரியாதை உண்டாகும், புதன் நன்றாக இருந்தால் போட்டி பந்தயங்களிலும், மற்றும் படிப்பிலும் முதல் இடத்தை பிடிக்கலாம்.

பெண்கள் :

குதூகலம் அதிகரிக்கும் சுப யாத்திரைகள் சென்றுவருவார்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். சிலருக்கு குழந்தைபாக்கியம் உண்டாகும். பொருளாதார வளம் கூடும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உழைக்கும் மகளிருக்கு பதவி தேடி வரும், மேலதிகாரி அனுகூலம் உண்டு, விரும்பிய இடமாற்றம் உண்டு. சுய தொழில் செய்யும் பெண்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும், தொழில் விஸ்தீரணம் லாபம் தரும்.

வணங்கவேண்டிய தெய்வமும் நல்ல செயல்களும் :

சுதர்ஸன சக்ரத்தாழ்வார், நரசிம்மர் வழிபாடும் தினமும் 12 தடவை ப்ரதிக்ஷணமும் நன்மை தரும், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதும், தேய்பிறை அஷ்டமி நாளில் சொர்ணபைரவரை வழிபடுவதும் குல தெய்வ வழிபாடும் நலம் தரும், ஊனமுற்றோர், இயலாதோருக்கு சரீர ஒத்தாசை செய்வது அன்னதானம் செய்வது ஏழை குழந்தைகள் படிக்க உதவுவது போன்றவை நன்மை தரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் -கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version