இன்றைய பஞ்சாங்கம் – செப்.23
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
பஞ்சாங்கம்
புரட்டாசி ~ 06 (23.09.2023 ) சனிக்கிழமை*
வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ புரட்டாசி மாதம் { கன்யா மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 8.08 Am வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 11.48 am வரை மூலம் பின் பூராடம்
யோகம் ~ ஸௌபாக்யம்
கரணம்~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.05
சந்திராஷ்டமம் ~ ரிஷபம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ நவமி
இன்று ~ புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை.
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..
இன்றைய (23-09-2023) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். நுணுக்கமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : ஆசைகள் பிறக்கும்.
கிருத்திகை : மதிப்பு மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
சிந்தனைகளில் குழப்பம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : குழப்பம் உண்டாகும்.
ரோகிணி : ஏற்ற, இறக்கமான நாள்.
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
வெளியூர் பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அசதிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். உறவுகளின் வழியில் ஆதரவான சூழல் அமையும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பேச்சுத் திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளால் அனுகூலம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : அனுகூலம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேல்நிலை கல்வி தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வருத்தம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : பொறுமை வேண்டும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தந்தை வழி உறவுகளால் அலைச்சல்கள் ஏற்படும். வருவாய் சார்ந்த முயற்சிகள் கைகூடும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் பிறக்கும். அமைதி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : மேன்மை ஏற்படும்.
சித்திரை : அனுபவம் பிறக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சந்தோஷமான நாள்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
பேச்சுக்களில் கனிவு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளைத் தவிர்க்கவும். வெளி உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : கனிவு வேண்டும்.
அனுஷம் : அறிமுகம் ஏற்படும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
அலுவலக பணிகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சிந்தனைகளில் ஒருவித தடுமாற்றம் தோன்றி மறையும். கால்நடை பணிகளில் நிதானம் வேண்டும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் விவேகத்துடன் இருக்கவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த செயல்களில் மாற்றம் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : குழப்பம் உண்டாகும்.
திருவோணம் : விவேகத்துடன் இருக்கவும்.
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
உறவுகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். மனதில் புதிய தேடல் பிறக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உற்பத்தி பணிகளில் லாபம் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
அவிட்டம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சதயம் : தேடல் பிறக்கும்.
பூரட்டாதி : லாபம் மேம்படும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் ஆர்வம் உண்டாகும். பணி நிமித்தமாக புதிய பொறுப்புகள் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : முயற்சிகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
ரேவதி : அனுசரித்துச் செல்லவும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
- ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்