இன்றைய பஞ்சாங்கம்: ஏப்.07
ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री:
श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி ~ 25 (7.4.2024 ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { *மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 2.56 am வரை சதுர்த்தசி பின் அமாவாஸ்யை
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 11.44 am வரை பூரட்டாதி பின் உத்திரட்டாதி
யோகம் ~ ப்ராம்யம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30. நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.10
சந்திராஷ்டமம் ~ ஸிம்மம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ சதுர்த்தசி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (07-04-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
நினைத்த சில பணிகள் அலைச்சலுக்கு பின் நிறைவேறும். மனம் விட்டு பேசுவதன் மூலம் கவலைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் சில மாற்றமான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். வெற்றி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
அஸ்வினி : கவலைகள் குறையும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
மனதில் முன்னேற்றம் தொடர்பான சிந்தனை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். வாகனம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.
மிருகசீரிஷம் : மதிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். பணி சார்ந்த சில தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.
திருவாதிரை : ஒத்துழைப்பான நாள்.
புனர்பூசம் : மதிப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
உடலில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். குடும்பத்தில் புரிதல் ஏற்படும். சில இடங்களில் விட்டுக்கொடுத்துச் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் துரிதம் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : சோர்வுகள் குறையும்.
பூசம் : மாற்றமான நாள்.
ஆயில்யம் : ஈடுபாடு உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
பணிகளில் மற்றவர்களை நம்பி இருக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். வாடிக்கையாளர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்கள் இடத்தில் சாதகமின்மையான சூழல் அமையும். எதிலும் விவேகத்தோடு செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
மகம் : தடுமாற்றம் ஏற்படும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : முடிவுகளில் கவனம் வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மதிப்பு மேம்படும். சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : தன்னம்பிக்கை பிறக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் வியூகங்களை மாற்றி அமைப்பீர்கள். உத்தியோகத்தில் புதுமையான சூழல் அமையும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : தனவரவுகள் உண்டாகும்.
சுவாதி : சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
விசாகம் : புதுமையான நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
எதிர்காலம் சார்ந்து புதிய வியூகங்களை அமைப்பீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை அவசியம். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : வியூகங்களை அமைப்பீர்கள்.
அனுஷம் : ஆதாயம் ஏற்படும்.
கேட்டை : ஆர்வம் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழியில் அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் தொடர்பான சுபகாரிய எண்ணங்கள் சாதகமாகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சமாளிப்பதற்கான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : தெளிவு பிறக்கும்.
பூராடம் : திருப்திகரமான நாள்.
உத்திராடம் : வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் சில அலைச்சல்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அனுகூலம் ஏற்படும்.
திருவோணம் : அனுபவம் கிடைக்கும்.
அவிட்டம் : தைரியம் பிறக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளால் கவலைகள் குறையும். வியாபாரத்தில் தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்களை உருவாக்குவீர்கள். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
சதயம் : கவலைகள் குறையும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
எந்தவொரு பணியிலும் விவேகத்தோடு செயல்படவும். சில நினைவுகளால் மனதில் இறுக்கங்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் கோபப்படாமல் செயல்படவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் அணுகுவது நல்லது. கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : விவேகத்தோடு செயல்படவும்.
உத்திரட்டாதி : ஆலோசனை வேண்டும்.
ரேவதி : நெருக்கடிகள் மறையும்.
தினம் ஒரு திருக்குறள்
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
தினசரி பஞà¯à®šà®¾à®™à¯à®•à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ தினப௠பலனà¯à®•à®³à¯ உபயோகமாக உளà¯à®³à®¤à¯. நனà¯à®±à®¿.
Nice to read this rasi palan
Very interesting to read this rasi palan
Very very helpful.
very good response