Home ஜோதிடம் பஞ்சாங்கம் பஞ்சாங்கம் மார்ச் 25- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் மார்ச் 25- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 25

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்
பங்குனி ~ 12 (25.3.2024) திங்கள் கிழமை
வருடம் ~ சோபக்ருத் வருடம் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 1.13 pm வரை பௌர்ணமி பின் பிரதமை
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 11.17 am வரை உத்திரம் பின் ஹஸ்தம்
யோகம் ~ வ்ருத்தி
கரணம் ~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30 am 5 to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.18
சந்திராஷ்டமம் ~ கும்பம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ ப்ரதமை .
இன்று ~ பௌர்ணமி, பங்குனி உத்திரம்.

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (25-03-2024) ராசி பலன்கள்


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


தந்தைவழி தொழிலில் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். புதிய துறை சார்ந்த கலந்தாய்வில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : மேன்மை ஏற்படும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் சேமிப்பு குறையும். வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி : ஆர்வமின்மை குறையும்.
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். வித்தியாசமான ஆடைகளின் மீது ஆர்வம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : செல்வாக்கு மேம்படும்.
திருவாதிரை : தனவரவுகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகளால் நன்மதிப்பு ஏற்படும். குறுந்தொழிலில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். உங்கள் மீதான வதந்திகள் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

புனர்பூசம் : புரிதல் மேம்படும்.
பூசம் : ஆர்வம் உண்டாகும்.
ஆயில்யம் : வதந்திகள் குறையும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். தனவரவுகளின் மூலம் கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஜாமீன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மகம் : அறிமுகம் ஏற்படும்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : துரிதம் ஏற்படும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


மூத்த உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். கலைத்துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மருமகன் வழியில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : வாய்ப்பு கிடைக்கும்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டிகள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : ஈடுபாடு உண்டாகும்.
விசாகம் : அனுபவம் ஏற்படும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


மனதில் பொருளாதாரம் தொடர்பான எண்ணம் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். ஆன்மிக காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : எண்ணம் மேம்படும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மனதளவில் ஒருவிதமான பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். பரிசு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மூலம் : பக்குவம் பிறக்கும்.
பூராடம் : வாய்ப்பு கிடைக்கும்.
உத்திராடம் : அலைச்சல் அதிகரிக்கும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


வாழ்க்கைத் துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனை மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
திருவோணம் : புரிதல் உண்டாகும்.
அவிட்டம் : ஆதாயம் கிடைக்கும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


திட்டமிட்ட பணிகளில் சில திருப்பங்கள் ஏற்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் தோன்றி மறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அவிட்டம் : திருப்பங்கள் ஏற்படும்.
சதயம் : ஆர்வமின்மையான நாள்.
பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் பிறக்கும். வியாபாரப் பணிகளில் லாபகரமான வாய்ப்பு ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்பு அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்பு உண்டாகும்.
உத்திரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.



தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

1 COMMENT

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version