
இன்றைய பஞ்சாங்கம் மே 07
||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம் | 14.05.2025 | புதன்கிழமை
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~ 31 { 14.5.2025 } புதன் கிழமை**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 1.57 வரை த்விதியை பின் த்ருதியை
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 11 .33 am வரை அனுஷம் பின் கேட்டை
யோகம் ~ பரிகம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்…
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30am and 2.00to3.00pm
சூரியஉதயம் ~ காலை 5.54
சந்திராஷ்டமம் ~ மேஷம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்விதியை
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (14-05-2025) ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் .!
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். கல்வி பணிகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கால தாமதமாக கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : தாமதம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் .!
சுப காரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணம் தொடர்பான வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : அறிமுகம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் .!
கால்நடைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : சுறுசுறுப்பான நாள்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் .!
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல் திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகளின் மீது ஆர்வமும், விருப்பமும் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
புனர்பூசம் : புதுமையான நாள்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் .!
புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
மகம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரம் : மேன்மை உண்டாகும்.
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் .!
நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் சாதகமாகும். எதையும் சமாளிக்கும் மன தைரியம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுதூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : தைரியம் அதிகரிக்கும்.
சித்திரை : மாற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் .!
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : ஒத்துழைப்பு ஏற்படும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் .!
மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். வாழ்க்கை துணைவர் பிடிவாதமாக இருப்பார்கள். திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். எந்தவொரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். பயனற்ற பழக்கவழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொடர்பான ரகசியங்களை பகிர வேண்டாம். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : திருப்தியின்மையான நாள்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் .!
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர் பாலின மக்கள் தொடர்பான விஷயத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதுவகையான உணவுகளை உண்பதில் ஆர்வம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
மூலம் : புதுமையான நாள்.
பூராடம் : விவேகம் வேண்டும்.
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் .!
மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். சபை நிமிர்த்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : செல்வாக்கு மேம்படும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் .!
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : ஆசைகள் மேம்படும்.
சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் .!
உயர் அதிகாரிகளின் மூலம் மறைமுகமான ஆதாயம் கிடைக்கும். கல்வி தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
உத்திரட்டாதி : பதற்றம் நீங்கும்.
ரேவதி : புரிதல் அதிகரிக்கும்.
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
இன்றைய பொன்மொழி
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
Seems very attractive.