spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஜோதிடம்பஞ்சாங்கம்பஞ்சாங்கம் ஏப்.23 - செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் ஏப்.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

- Advertisement -
astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – ஏப்.23

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்
சித்திரை~ 10
(23 4.2024) செவ்வாய் கிழமை.*
வருடம் ~ க்ரோதி வருடம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாஸம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
*திதி ~ முழுவதும் பௌர்ணமி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம் ~ 11.00 pm வரை சித்திரை பின் ஸ்வாதி
யோகம் ~ வஜ்ரம்
கரணம் ~ பத்யம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.01
சந்திராஷ்டமம்~ 9.55 am வரை கும்பம் பின் மீனம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ பௌர்ணமி
இன்று * ~ சித்திரா பௌர்ணமி
வாஸ்து நாள் நேரம் 8.54 am to 9.30 am.


இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (23-04-2024) ராசி பலன்கள்


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள்..!


வெளிவட்டாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் எளிதில் முடியும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள்..!


திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முடிவு ஏற்படும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள்..!


ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். சிற்றின்ப செயல்பாடுகளால் விரயங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் பணி நிமிர்த்தமான புதிய இலக்குகள் பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். விரும்பிய பொருட்ளை வாங்கி மகிழ்வீர்கள். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
திருவாதிரை : விரயங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : மாற்றம் பிறக்கும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள்..!


தடைபட்ட பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். அசையா சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : குழப்பங்கள் நீங்கும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள்..!


மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது குறித்த எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்

மகம் : தீர்வு கிடைக்கும்.
பூரம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திரம் : நெருக்கம் மேம்படும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள்..!


எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வர்த்தகப் பணிகளில் ஆதாயம் மேம்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : ஆதாயம் மேம்படும்.
சித்திரை : ஆதரவான நாள்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள்..!


குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். எதிலும் தனித்தன்மையோடு செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனை மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

சித்திரை : விவாதங்களை குறைக்கவும்.
சுவாதி : தனித்தன்மையோடு செயல்படுவீர்கள்.
விசாகம் : புரிதல் உண்டாகும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள்..!


வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகளை பொறுமையுடன் வசூலிக்கவும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள்..!


உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் புதிய வாய்ப்பு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : இலக்குகள் பிறக்கும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள்..!


முயற்சிக்கேற்ப புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆலோசனை கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : வாய்ப்பு கிடைக்கும்.
திருவோணம் : வெற்றிகரமான நாள்.
அவிட்டம் : ஆலோசனை கிடைக்கும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள்..!


கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : அலைச்சல் அதிகரிக்கும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள்..!


குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் தாமதம் ஏற்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : புரிதல் மேம்படும்.
ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.



thiruvalluvar
thiruvalluvar deivapulavar

தினம் ஒரு திருக்குறள்


அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe