- Ads -
Home ஜோதிடம் பஞ்சாங்கம் பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan dhinasari
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் ஜூன 06 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!

श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

வைகாசி~ 30 (13.6.2025) வெள்ளி கிழமை.*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ * வைகாசி மாஸம் { ரிஷப மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 3.24 pm வரை த்விதியை பின் த்ருதியை
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ இரவு 11.34 வரை பூராடம் பின் உத்திராடம்
யோகம் ~ சுப்ரம்
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 5.54
சந்திராஷ்டமம் ~ ரிஷபம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ த்விதியை 
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 20.6.2025


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள்


தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வருமான வாய்ப்புகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனைப் பணிகளில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள்


உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள்


மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுகளில் மாற்றம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : ரகசியங்களை அறிவீர்கள்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள்


தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மறைமுகத் தடைகளை வெற்றிகொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.
பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.
ஆயில்யம் : போட்டிகள் குறையும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள்


வித்தியாசமான உணவுகளைத் தவிர்க்கவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். நாவல் விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுபம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : குழப்பங்கள் விலகும்.
பூரம் : ஒத்துழைப்பு மேம்படும்.
உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள்


அனுபவம் வாய்ந்த செயல்களால் வாழ்க்கை சிறப்படையும். பணிபுரியும் இடத்தில் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். விலகி நின்றவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் நிலவும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உயர்ரக வாகனங்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : ஒத்துழைப்பான நாள்.
சித்திரை : ஈர்ப்பு உண்டாகும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள்


சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களின் இடத்தில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டத்தில் அனுபவம் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

சித்திரை : துடிப்புடன் செயல்படவும்.
சுவாதி : நெருக்கம் மேம்படும்.
விசாகம் : அனுபவம் கிடைக்கும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள்


மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வரவுகள் தேவைக்கு இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கவலைகள் குறையும்.
அனுஷம் : வரவுகள் கிடைக்கும்.
கேட்டை : திருப்பங்கள் உண்டாகும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள்


வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தவறிய சில வாய்ப்புகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். அவ்வப்போது சில விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்ட காரியத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தர்ம காரியத்தில் ஒருவிதமான ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மூலம் : குழப்பங்கள் நீங்கும்.
பூராடம் : மாற்றம் பிறக்கும்.
உத்திராடம் : ஆர்வமின்மையான நாள்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள்


உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அருள்தரும் வேள்விகளில் கலந்துகொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள்


உடன்பிறந்தவரிடம் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயிர்த் தொழிலில் சிந்தித்துச் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள்


பிறமொழி மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொலைதூரக் கல்வியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
உத்திரட்டாதி : தாமதங்கள் விலகும்.
ரேவதி : ஆரோக்கியம் மேம்படும்.



தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

6 COMMENTS

  1. அருமை. பக்கத்திற்கு பக்கம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. உங்கள் தினசரி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version