Home ராசி பலன்கள் மாத ராசி பலன்கள் தனுசு (பிலவ – மாசி மாத பலன்கள்)

தனுசு (பிலவ – மாசி மாத பலன்கள்)

தனூர்(மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

karthigai month palangal

ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள்
(12.2.2022 முதல் 13.03.2022 வரை)

ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள் (12.02.2022 முதல் 13.03.2022 வரை) புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி  மாசி மாதம் ஒரு நாள் முன்னதாக துவங்குகிறது

வருகிற 12.02.2022 நள்ளிரவு 12:23:6 மணிக்கு சூரியபகவான் மகர ராசியில் இருந்து  கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் கும்ப ராசியில் 13.03.2022 இரவு 08:49:01 மணி வரை சஞ்சரிக்கிறார்.

இது புஷ்யபக்ஷ அயனாம்ஸத்தை ஒட்டி ஜகந்நாத் ஹோரா கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. 

வாக்கியப்படி 13.0.2022 அதிகாலை 04.13 மணிக்கு (உதயாதி 55.37 நாழிகைக்கு) கும்ப ராசிக்கு பெயர்ச்சிஆகிறார்.

ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் புஷ்ய பக்ஷ அயனாம்ஸ பஞ்சாங்கப்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்தல் சரியாக வரும்.

கோச்சார கிரஹ நிலைகள்

கிரஹ பாத சாரங்கள் : மாசி மாத பிறப்பின் போது

லக்னம் – விருச்சிகம் – விசாகம் – 4
சூரியன் –  கும்பம் – அவிட்டம் – 3
சந்திரன் – மிதுனம் – மிருகசீரிடம் – 4
செவ்வாய் – தனூர் – பூராடம் – 3
புதன் –  மகரம் – உத்திராடம் – 3
வியாழன் – கும்பம் –  சதயம் – 4
சுக்ரன் –  தனூர் –  பூராடம் – 3 
சனி – மகரம் – அவிட்டம் – 1
ராகு – ரிஷபம் – கிருத்திகை – 3
கேது – விருச்சிகம் – அனுஷம் – 1

கிரஹ வலிமைகள் :

மிக வலுவான கிரஹம் சுக்ரன்,  வலுவான கிரகம் :  குரு, சனி

சூரியன், புதன், ராகு,கேது, செவ்வாய் இவை மத்ய பலனை கொடுக்கும்

இவை மாதம் பிறக்கும் போது உள்ள நிலை. ஒவ்வொரு கிரஹமும் அந்த மாத்தத்தில் சஞ்சார நிலை கொண்டு வலிமை மாறுபடும்

இவற்றை கணக்கில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது. மேலும் ஜாதகர் பிறப்பு லக்னத்தை ஒட்டி பலன் சொல்லப்படுகிறது உதாரணமாக மேஷ ராசி ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்தால் கடகராசி பலனும் அவருக்கு பொருந்தும். உங்களது பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்து அறியவும்.

பொது பலன்:

பாரத தேசம் & தமிழகம் பொருத்தவரை:  
சுக்ரன் வலு அதனால் கலைத்துறை, வங்கி பணம் புழங்கும் இடம், ஆடை ஆபரண உற்பத்தி & விற்பனை, போன்றவை நல்ல முன்னேற்றம் பெறும். அன்னியர்களிடம் தேசத்தின் மதிப்பு கூடும். அரசர்களுக்குள் உண்டாகும் சண்டை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும். பொதுவாக விவசாயம், கல்வி துறைகள் சிரமத்துக்குள்ளாகும். விரோதிகளின் கை ஓங்கியது போல தெரியும், செவ்வாய் மகரத்தில் சஞ்சரிக்கும் 26.02.2022 முதல் ஓரளவு நன்மை உண்டாகும். தமிழகத்தில் குழப்பங்கள் நீங்கி ஓரளவு நன்மை உண்டாகும். மத்தியில் ஆளும் ஆட்சி தங்களது நோக்கங்களை நிறைவேற்றும் போது உலக அரங்கில் வரவேற்பை பெற்றாலும் பொருளாதார தேக்கத்தினால் மக்கள் விரக்தி அடைவர் நாட்டில் சலசலப்பு இருந்து கொண்டிருக்கும். பொதுவில் பெரிய ஆபத்துகள் இல்லை எனினும் மக்களிடம் பயம் கலந்த ஒரு நிலை இருந்து கொண்டிருக்கும்.

மாத ராசிபலன் கணிப்பு :
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி, ஜோதிடர்,
ஸ்ரீஅக்ஷயா வேதிக் அஸ்ட்ரோ ரிசர்ச் பௌண்டேஷன்
D1-304, Block D1, Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Land Line : 044-35584922 | 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]


தனூர் ( மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

ராசிநாதர் குரு, சூரியனுடன் 3ல் தைரிய ஸ்தானம் இருந்தாலும் சூரியன் மட்டுமே அதிக நன்மை குருபகவான் பார்வையால் நன்மை என்ற அளவில் இருக்கும். சுக்ரனும்,புதனும் மற்றும், செவ்வாய் சனி 2ம் இடத்தில் மாத பிற்பகுதில் கூட்டு சேர்வது ஓரளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இருந்தாலும் ராகு, 5ன் இடப்பலன், மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைதல், தடைகள் ஏற்படுதல், குழந்தைகளால் மன வருத்தம், குழந்தை பேறு தாமதம் ஆகுதல் என்று இருக்கும். இந்த மாதமும் கேதுவால் அதிக நன்மை, ஜீவன வகையில் வருமானம் பெருகுதல், பொருளாதார ஏற்றம், நல்ல வேலை சம்பளம், விரும்பிய இடமாற்றம், சொந்த தொழில் விருத்தி அடைதல் என நன்றாக இருக்கும் மாத ஆரம்பம் சலிப்பை தரும் விதமாக இருக்கும். இரண்டில் புதன் மன கிலேசம் அவ நம்பிக்கை தருவதால் குடும்பத்தில் சிறு மோதல்கள், பொது இடங்கள், உழைக்கும் இடம் இவற்றில் வீண் வாதங்கள் என்று இருக்கும் வார்த்தை பிரயோகத்தை கவனமாக செய்வது பெரியோர்களின் ஆலோசனைப்படி நடப்பது என்று இருந்தால் நன்மை உண்டு.. ராசிநாதர் குரு பார்வையால் நன்மை செய்கிறார். சனி லாபத்தை பார்ப்பதால் உழைப்புக்கேற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கும் பிறப்பு ஜாதகம் நன்றாக இருந்தால் நன்மை அதிகம் இருக்கும் பரவாயில்லை என சொல்லும் மாதமாக இருக்கும். எதையும் யோசித்து தகுந்த ஆலோசனை பெற்று செய்வதும் கடுமையான வார்த்தை பிரயோகத்தை தவிர்ப்பதும் மேலும் நன்மை தரும்.

மூலம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 14.02.2022 காலை 09.38 மணி முதல் 15.02.2022 காலை 11.38 மணி வரை

பூராடம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 15.02.2022 காலை 11.38 மணி முதல் 16.02.2022 பிற்பகல் 01.35 மணி வரை

உத்திராடம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 16.02.2022 பிற்பகல் 01.35 மணி முதல் 17.02.2022 பிற்பகல் 02.04 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பாம்பு தலையில் இருக்கும் சிவன் கோயில்கள் துர்கை கோயில்கள் மற்றும் பாம்பு படுக்கையில் அந்த சயனமாக இருக்கும் பெருமாள் கோயில் சென்று வழிபடுவதுவும், அன்னதானம், ஏழை குழந்தை படிக்க உதவிகள், சரீர ஒத்தாசைகள் இவற்றை செய்ய நலம் உண்டாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version