ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)
கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது. ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார்.
மீன ராசி (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) :
இந்த வருடம் மட்டுமல்ல அடுத்து வருகின்ற இரண்டு வருடங்களும் உங்களுக்கு யோகமான காலம் நீண்டகால தேவைகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். கடந்த வருடத்தில் வழக்குகள் ஏதும் இருந்தால் அதில் வெற்றியை பெறுவதோடு கணிசமான தொகையையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். மனதில் தெம்பும் தைரியமும் உண்டாகும். சனி பத்தில் இருந்தாலும் பெரிய பிரச்சனைகள் தராது. நவம்பரில் குரு உங்கள் ராசிக்கு பத்தில் வருவதால் கொஞ்சம் பின்னடைவு இருக்கும். இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. செழிப்பான வருடம்.
உடல் ஆரோக்கியம்:
9ல் குரு இருப்பதால் நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும். ராகுவும் சுகஸ்தானத்துக்கு வந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடும்ப அங்கத்தினர்களுடைய உடல் ஆரோக்கியமும் மிக நன்றாக இருக்கும். இதுவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் முற்றிலுமாக நீங்கிவிடும். மகிழ்ச்சி அதிகரித்து வியாதிகளை இல்லாமல் செய்துவிடும். வருட கடைசி 3மாதங்கள் கொஞ்சம் படுத்தும் இருந்தாலும் தகுந்த மருத்துவ ஆலோசனகளை கேட்டு நடப்பது நல்லது.
உறவுகள்:
பெற்றோர்கள், மனைவி/கணவர், சகோதரவகை, பிள்ளைகள் மற்ற குடும்ப உறவினர்கள் என்று அனைவரும் உங்கள் மனம் விரும்பும்படி நடப்பர். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பார்கள். இல்லத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப அந்தஸ்து கூடும். பிள்ளை/பெண்ணுக்கு திருமண ஏற்பாட்டை செய்வீர்கள். புதிய உறவுகளால் மேலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருடம் முழுவதும் கூட எல்லோருடைய அந்யோந்யம் இருக்கும். கணவன்/மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
உத்தியோகம்:
இதுவரை இருந்துவந்த தடங்கல்கள் மாறி பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் என்றும் புதிய வேலைக்கு முயற்சித்தால் நல்ல வேலை கிட்டும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு எளிதில் வேலை கிட்டும். வெளிநாட்டு வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான சந்தோஷமான நிலை உண்டாகும். வேலை பளு குறையும், வருமானம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர், விரோதிகள் விலகுவர். தேவைகள் பூர்த்தியாகும்.
தொழில்/வியாபாரம்:
புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற காலம் இது. ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சி பெறுவதை பார்ப்பார்கள். வங்கி கடன் எளிதில் கிடைக்கும், ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி லாபத்தை தருவர். கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை பெருகும். புதிய தொழில் விஸ்தரிப்பையும் செய்யலாம். சேமிப்பை அதிகரியுங்கள். இந்த வருடம் பொற்காலம் என்பதால் கவலைபடாமல் உங்கள் தொழிலை மேம்படுத்துங்கள். திட்டங்கள் செயல்படும்போது அதில் வெற்றி உண்டாகும்.
கலைஞர்கள்:
திரைத்துறை, மீடியா, மற்ற கலைஞர்கள் என்று அனைவருக்குமே நல்ல வருடம் இது. புதிய வாய்ப்புகள் தேடிவரும். வேலைக்கு இருப்போருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும் நல்ல வருவாய் உண்டாகும். கேளிக்கைகளால் மனம் சந்தோஷம் அடையும். பெரிய பிரச்சனைகள் ஏதும் இருக்காது. மக்கள் செல்வாக்கும், ரசிகர்களின் ஆதரவும் உண்டாகும்.
அரசியல்வாதிகள்:
பதவி தேடிவரும். தேர்தலில் நின்றால் வெற்றி நிச்சயம், ஆளும்கட்சியில் இருந்தால் அரசு பதவி நிச்சயம். வருமானம் அதிகரிக்கும். கட்சி மேலிட பாராட்டை பெறுவீர்கள் தொண்டர்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். எதிரிகள் வீழ்ச்சி அடைவர், பெரிய கஷ்டங்கள் இந்த வருடத்தில் இருக்காது. வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டால் முன்னேறலாம்.
மாணவர்கள்:
9ல் குரு யோகத்தை தருவார். அக்கறையுடன் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி நிச்சயம். ஆசிரியர் பெற்றோர் பாராட்டை பெறுவீர்கள் நல்ல நண்பர்கள் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாட்டு படிப்பு எண்ணம் நிறைவேறும். புதிய விரும்பிய பாடம் கிடைக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கவனம் சிதறாது.
விவசாயிகள்:
விளைச்சல் அதிகரித்து வருமானம் பெருகும். கால்நடைகள் மூலமும் லாபம் உண்டாகும். மானாவாரி பயிர் சாகுபடிமூலம் பணம் அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். புதிய சொத்து வாங்குவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதுமனை புகும் யோகம் உண்டாகும்.
பெண்கள்:
வருடம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும், உறவினர்களுடன் இணக்கம் இருக்கும். கணவருடன் அந்யோந்யம் உண்டாகும். திருமணத்துக்கு வரன் தேடிக்கொண்டிருப்போருக்கு எளிதில் கணவர் அமைவார். புனித யாத்திரைகள் குடும்ப சுற்றுலா என்று சென்று வருவீர்கள். உழைக்கும் மகளிருக்கு நல்ல நிலை உண்டாகும் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் என்று கிடைக்கும். தொழிலில் மேன்மை ஏற்ப்பட்டு இல்லத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
வணங்கவேண்டிய தெய்வமும் ப்ரார்த்தனைகளும் :
மகிழ்ச்சி அதிகம் இருப்பதால் உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை வணங்குங்கள். அதோடு சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். சிவாஷ்டகம் சொல்லுங்கள் ஓம் நமசிவாய என்று சொல்லுங்கள், தக்ஷிணாமூர்த்தியை வழிபடுங்கள். அன்னதானம் செய்யுங்கள் காக்கைக்கு சாதம் இடுங்கள் இயலாதோருக்கு உதவி செய்யுங்கள்.
.வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்…
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM