Home ராசி பலன்கள் வருட ராசி பலன்கள் தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: மீனம்

தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: மீனம்

new year palangal 2021

தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்

சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.

இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.

பிலவ வருட வெண்பா:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்

பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.

குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!

புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]


12 meenam

மீனம் : (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 4பாதங்கள், ரேவதி 4பாதங்கள் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்: ராசிநாதன் குரு சஞ்சாரம் சுபம் கருதி நல்ல செலவுகளாக இருக்கும். குழந்தைகள் படிப்பு செலவு, வீடுவாங்குதல், திருமணம் குழந்தை போன்ற செலவுகளாக இருக்கும். சூரியன் 2ல் உச்சம்

கொஞ்சம் உடல் உபாதைகள் கண் வலி, தலைவலி கொடுக்கும். மேலும் சுக்ரன் 2ல் அதிக பணவரவு, உத்தியோகம்/தொழிலில் மேன்மை புதிய வீடுவாங்குதல், புனித யாத்திரை, விருந்து கேளிக்கைகள் இப்படி நன்மையாகவே இருக்கும் 3ல் ராகு 11ல் சனி ஆட்சி இருவரும் வருடம் முழுவதும் பணத்தை அள்ளித்தருகின்றனர்.

குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் அதேநேரம் 9ல் இருக்கும் கேது பெற்றோர் உடல் நலம் பாதிக்க செய்வார் மன கவலைகளை தருவார் செவ்வாய் 6,8 ராசிகளில் சஞ்சரிக்கும் காலமும் சில எதிர்பாராத தொல்லைகள், மன உளைச்சல், பண விரயம் வழக்கு என தருவார் இருந்தாலும் பெரும்பாலான கிரஹங்கள் நன்மை தருவதாலும் குருபகவான் பார்வை பலம் தருவதாலும் சங்கடங்கள் குறைவாகவும் நன்மைகள் அதிகமாகவும் இருப்பதும் பண சேமிப்பு அதிகரிக்க செய்யும். மகிழ்ச்சியான மாதங்களாக இருக்கும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: குரு சனி லாபத்தில் 5ல் சூரியன் ஆட்சி என்று இதுவும் மிக நன்றாக இருக்கும், மற்ற கிரஹங்களும் சாதகம், குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம், குழந்தை போன்ற சுப நிகழ்வுகளால் ஒற்றுமை, புதிய உறவுகளால் மகிழ்ச்சி என இருக்கும். தடை பட்டுவந்த குழந்தை பாக்கியம், திருமணம் இவை நிறைவேறும். பிள்ளைகளால் பெருமையும் சிலருக்கு சகோதரவகையால் நண்மையும். விட்ட்ப்போன சொந்தங்கள் திரும்ப வந்து ஒட்டிக்கொள்ளுதலும் அதை ஏற்று மகிழ்ச்சியாக இருப்பதும் நடக்கும். பழைய நண்பர்களால் பெரிய நன்மைகளும் உண்டாகும் அது குடும்பத்தினரை உற்சாக படவைக்கும். வீடு யோகம் உடாகும். பெற்றோர் வழியில் மருத்துவ செலவுகள் இருக்கும் கவனம் தேவை. உத்தியோகம், சொந்ததொழில் என்று ஜீவன வகையில் நன்றாகவே இருக்கும். விரும்பிய வேலை இடமாற்றம், சொந்த தொழிலில் லாபம் அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணத்தை சேமிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் இந்த நான்கு மாதமும் வருமானம் அதிகரிக்கும். நல்ல நிகழ்வுகளாகவே அதிகம் நடக்கும். மருத்துவ செலவுகள், வீண் விரயம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: பங்குனியில் குருபகவான் ஜென்மத்தில், ராகு 2ல் , 8ல் கேது என்று முன்கூட்டியே தரும் பலனால் மந்த நிலை, குடும்பத்தில் அதிக செல்வு, கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு, பிரயாணத்தால் விபத்து காயம், முயற்சிகள் தடைபடுதல் கொஞ்சம் ஸ்லோவாக உத்தியோகம், சொந்த தொழில் என்று செல்வது, வேலை பளு அதிகரித்தல் என்று ஒருபக்கம் இருக்கும். குடும்பத்தை பிரிய நேரும். இருந்தாலும் சூரியன் புதன் சுக்ரன் செவ்வாய் சஞ்சாரம் நன்மைகளை செய்வதாலும் சனி பலம் தருவதாலும் இவற்றை சமாளித்து பெரிய பாதிப்பில்லாமல் பார்த்து கொள்வீர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை, பயணங்கள் போது கவனமாயிருத்தல் என்றிருந்தால் போதும், அதே போல் கூடுமானவரையில் எவரோடும் மோதல் போக்கு வேண்டாம். கடந்த 8மாதங்களில் ஏற்படும் அதிக நற்பலன்கள் இந்த 4 மாதங்களை சமாளிக்க உதவும். அதே போல் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் மேற்சொன்ன கஷ்டங்கள் அதிகம் இருக்காது. ஜீவன வகையிலும் பெரிய பாதிப்புகள் இல்லை அதனால் கவலை வேண்டாம். பொதுவில் கடைசி நாலுமாதங்கள் சுமார்.

ப்ரார்த்தனைகள் : நன்மைகள் அதிகம் இருப்பதால் உங்களுக்கு மிகவும் பிடித்த தெய்வத்தின் பெயரை உச்சரித்து கொண்டிருங்கள், குல தெய்வ வழிபாடும் விளக்கேற்றுதல் வஸ்திரம் சாற்றி படையல் (அமுது படைத்தல்) செய்தல் இவை நன்மை தரும். மேலும் தாராளமாக அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்ற தான தர்மங்களை செய்வதால் நன்மை அதிகரிக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version