விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் எம்.பி.,யுமான திருமாவளவன் பேசியுள்ள ஒரு வீடியோ பதிவு இப்போது வைரலாகியுள்ளது.
அண்மையில் லண்டன் சென்றுவிட்டு, விடுதலைப் புலிகள் குறித்தும் பிரபாகரன் குறித்தும் பொய்யான தகவல்களைக் கூறினார் என்று உலகம் எங்கும் பரவியுள்ள ஈழத் தமிழர்களால் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் திருமாவளவன், இப்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
முன்னர், விடுதலைப் புலிகள்தான் என்னை காங்கிரஸ், திமுக., கூட்டணியில் சேரச் சொன்னார்கள் என்று ஒரு பகீர் தகவலைப் போட்டு குழப்பிய திருமாவளவன், இப்போதும், காங்கிரஸ், மற்றும் திமுக. ,தந்த நெருக்கடியில்தான் ராஜபட்சவை சந்தித்தேன் என்று சொல்லி கூட்டணி தர்மத்துக்கு மேலும் மகுடம் சூட்டியிருக்கலாம்.
ஆனால் அதை விடுத்து, நானாகப் போய் ராஜபட்ச கையைப் பிடிக்கவில்லை, நானாக என் பல்லை இளிக்கவில்லை… ராஜ்பட்சவே வந்து என் கையைப் பிடித்து குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார்… என்று ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார் என்று அங்கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
காரணம் இவர் பேச்சின் நம்பகத்தன்மை குறித்து இப்போது அதிகம் கருத்துகள் எழுப்பப் படுவதால்!
இது குறித்த சில டிவிட்டர் பதிவுகள்…
இந்த டிஜிட்டல் உலகில் அண்ணன் அருமையா ரீல் விடுறார் என்றால் எல்லாம் உங்க முட்டாள் தனத்தின் மீது பயபுள்ளைங்க என்ன சொன்னாலும் நம்பும் பக்கிங்க என்கிற நம்பிக்கையின் பேர்ல தான் வீடியோவை பார்த்து அண்ணனை ஏமாத்திடாதீங்க அவர் சொன்னது தான் உண்மைன்னு கடைசி வரைக்கும் முட்டு கொடுங்க ப்ளீஸ்.
அவன் தான் கை கொடுத்தான் நான் கொடுக்கலைன்னு சொல்றார் வீடியோல என்ன இருக்கு யார் கொடுக்குறா.. யார் பம்மிகிட்டு நிக்கிறா.. அடேங்கப்பா இம்புட்டு வீடியோக்கள் இருக்கும் போதே.. என்னமா அடிச்சு எத்துறார்.. சீமானை பீட் பண்ணிடுவார் போல..
அங்க போயி கத்த வேண்டியதான பாசிச வெறி பிடித்த ராஜபக்ஷே ஒழிகன்னு. புட்டத்துல துப்பாக்கிய விட்டு ரெண்டு குண்டயும் சிதற விட்டுருப்பான். கள்ளுக் குடிச்ச குரங்கு மாதிரி புளிச்ச சிரிப்பு சிரிச்சு, வெட்கம் இல்லாம பரிசும் வாங்கிட்டு (அதயுமா கைய புடிச்சு இழுத்து குடுத்தான்) பேச்ச பாரு.
ஜடாயூ@Rmraj05303886·4hReplying to @swamies07 and @roamingraman
அறிமுகப்படலத்தில் ஆர்வமாய் அருகில் சென்று கைகுலுக்கியபின் வலதுகையால் வணக்கம் வைக்க எத்தனிக்கிறார்
தற்போது சீமான்+சீமான்=திருமா