டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா ???? தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.
விளக்கேற்றுவது குறித்து பிரதமர் அறிவித்த ஒரு மணி நேரத்தில் சன் டிவி யில் சமூகவலை தளங்களில் நெட்டீசன்ஸ் டிரெண்டிங் என நடிகர் செந்தில் விளக்கு ஏந்துவது போன்ற படத்தை போட்டு தன் அரசியல் சுய அரிப்பை தீர்த்துக் கொண்டுள்ளது.
ஆமா மாறன் குரூப்ஸ் 2006- 11 திமுக ஆட்சியில மின்சாரமே இல்லாம 5 வருஷமா தினமும் மக்கள் இரவு வீட்டுல விளகேற்றி தானே இருந்தார்கள் மறக்கமுடியுமா அந்த கொடுமையை!
ஏன்பா மெரீனாவுல டார்ச் லைட் அடிச்சா ஜல்லிக்கட்டு மட்டும் நடந்திடுமா ??? ஏன் அடிச்ச ?? ஒரு ஒற்றுமையை காட்ட தான ? அதே தான்பா செய்ய போறோம் !!
ஏப்ரல் 5 ம் நாள் கிட்ட தட்ட 10 நாட்களை தாண்டி இருப்போம். ரெட்லைட் தொழிலோடு தொடர்புபடுத்தி திமுக R.S. பாரதி சொன்ன சில ரெட்லைட் மீடியாக்களும் , கம்யூனிஸ்ட் போன்ற தேச விரோதிகளும் இந்த 21 lock down தேவை தானா ???
இதனால் ஒன்றும் ஆக போவதில்லை என்று பரப்புரை செய்ய ஆரம்பிச்சாச்சு! இதை நம்பி மக்கள் வெளியே வர ஆரம்பித்தால் என்ன ஆகும் ??? ஆனால் நம்மை பார்த்து இப்போது அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் ஊரடங்கு அறிவித்துள்ளது என்பதே உண்மை.
இப்போது மக்களிடையே இருக்கும் 21 நாள் lock down ஆதரவு தொடர வேண்டும், மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி ஆக வேண்டும்.
டாக்டர்கள் , செவிலியர்கள் , தூய்மைபணியாளர்கள் சோர்ந்து போகலாம்* அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல வீட்டுக்குள்ளேயே இருக்கும் பலர் நாம் தனிமை படுத்தப்பட்டுள்ளோமோ என மனரீதியாக விரக்தி அடைய கூடும்.
பிரதமர் இன்று காணொளியில் சொன்ன வாசகத்தை முழுமையாக கேட்கவும். வீட்டில் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என நினைக்காதீர்கள் 130 கோடி மக்கள் உங்களோடு இருக்கிறோம். இதை ஒருவருக்கொருவர் உணர்த்த தான் வீட்டு வாசலில் விளக்கேற்ற சொன்னார்!
வீட்டு வாசலில் விளக்கேற்றினால் வைரஸ் செத்து விடுமா என மெத்த படித்தவர்களே நக்கல் செய்வதை காண முடிகிறது. ஆம் ஓரளவு முடியும் இதுவும் நிச்சயமா ஆன்மீகம் தான்!
வீட்டு வாசலில் விளக்கேற்றுவதால் அதிலிருந்து வரும் வெப்பம் ஒரு விதமான புகை இவற்றால் காற்றில் கிருமிகள் பரவாது. அதனால் தான் பணி காலம் துவங்கும் கார்த்திகை மாதம் வீட்டு வாசலில் விளக்கு வைத்தனர் நம் முன்னோர். வீட்டில் விளக்கேற்றுவது கூட காற்றில் காந்த சக்தியை ஈர்த்து பாசிடிவ் எனர்ஜி கொடுக்கும்.
இதை விதண்டாவாதமாக பகுத்தறிவு என மறுத்தால் முட்டாள் நாமாக தான் இருப்போம். கைதட்டுவது விளக்கேற்றுவது இதெல்லாம் உளவியல் ரீதியாக மக்கள் மனதில் தைரியம் தெம்பை ஏற்படுத்துவது. இதையே வெளிநாட்டுக்காரன் சொன்னா Excellent ன்னு சபாஷ் சொல்லுவாங்க நம்மாளுங்க…
எதை பற்றியும் கவலைபடாதீர்கள்… 130 கோடி மக்களின் தலைவன் எந்த விஷயத்தையும் பொழுது போக்கிற்காக சொல்லவில்லை!
நம்பிக்கையோடு இருப்போம்
கொரோணாவை ஒழிப்போம்
தனித்திரு
விழித்திரு
ஏப்ரல் 5 ம் நாள் 9 மணிக்கு 9 நிமிடம் மின்சார விளக்குகளை அனைத்துவீட்டு வாசலில் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்
- கா.குற்றாலநாதன், நெல்லை