― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைசீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும்!

சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும்!

- Advertisement -
ladakh1

இந்தியா சீனாவிற்கும் சனிக்கிழமை இரவு நடந்த சண்டையில், பேங்காங் ஏரிபகுதியில்1962 முதல் சீனவிடம் இருந்து வந்த மிக முக்கிய ரிக்வின் சிகரத்தை கைப்பற்றியது இந்தியா..

சீன ராணுவ வீரர்கள் கொல்லபட்டதாகவும் சிலர் பிணைகளாக பிடிக்க பட்டதாகவும் தகவல்.. இந்திய தரப்பில் எந்த சேதாரமும் இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தி..

இந்த ரிக்வின் சிகரம் தற்போது உள்ள லைன் ஆப் அக்சுவல் கன்ட்ரோலில் இருந்து 3.5 கிலோ மீட்டர் சீன எல்லையில் உள்ளது.. கைப்பற்ற பட்ட இந்த இடம் மிக உயரமான இடம் எனபதால்.. இதிலிருந்து சீன வசம் உள்ள மொத்த தெற்கு பாங்காக் ஏரி பகுதியையும் கட்டு படுத்த முடியும்.. இந்த இடந்தை பாதுகாக்க அதிகப்படியான சீன வீரர்கள் இருந்துள்ளனர்.. ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் இந்திய வீரர்கள் சென்று அந்த இடந்தை கைப்பற்றி விட்டனர்..

இந்த இடத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள பாங்காங் ஏரி முழுவதையும் அதாவது பிங்கர் 8 முதல் ஒன்று வரை கண்காணிக்க முடியும்… இந்த இடத்தில் அமெரிக்காவிடம் நாம் வாங்கிய M777 ஹவிட்சர்களை வைத்தால் தொலைந்தான் சீனாகாரன்.. அதிலும் குறிப்பாக அந்த பீரங்கியில் லேசர் கைடட் எக்ஸ் காலிபர் குண்டுகளை பயன்படுத்தினால் அங்குள்ள மொத்த சீன முகாம்களையும் சில மணி நேரத்தில் காலி செய்து விடலாம்.!

உயரம் போருக்கு மிக சாதகம்.. அதுவும் அந்த உயரத்தில் இருந்து எதிரியால் பதிலடி தரமுடியாத மிகச் சிறந்த ஆயுதத்தோடு தாக்கும் போது வெற்றி நிச்சயம்..

இதுவரை இந்தியா தான் சீனாவிடம் பேச்சுவார்தையில் கெஞ்சியது.. ஆனால் இனி நடக்கும்‌ பேச்சு வார்த்தையில் இந்த இடந்தில் இருந்து பின் வாங்குமாறு சீனா தான் கெஞ்சும்.. ஆனால் இந்நியா இனி இந்த இடத்தை காலி செய்யாது என்றே தோன்றுகிறது.. காரணம் சீனாவிற்கு பாடம் கற்றுத் தர இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது..

மேலும் நம் விமானந்தாங்கி போர்கப்பல் ஐ என் எஸ் விக்ரமாதித்யா, தென் சீன கடல் பகுதிக்கு விரைந்து கொண்டுள்ளது.. அது அமெரிக்க படையோடு தொடர்பில் இருந்து வருகிறது..

ladakh

ஆக சீனா ஒரு சின்ன சேட்டை செய்தாலும்.. அதை குமுறி எடுக்க உலக நாடுகளே தென் சீன பகுதியில் காத்துக் கிடக்கின்றன..

நவம்பரில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் இழந்த தன் செல்வாக்கை காப்பாற்ற சீனாவை ஒரு குத்தாவது குந்துவார் ட்ரம்ப் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.. ஆக சீனாவுக்கு இப்ப கட்டம் சரி இல்லை..

எது எப்படியானாலும் நாம் கில்கிட்ஸ்தானை பிடிக்க வைத்த பொறியியல் சீனா தானாக வந்து சிக்கிக் கொண்டது.. 1962 எல்லைக் கோடு மஞ்சள் நிறம்.
தற்போது எல்லைக் கோடு பச்சை நிறம்… இந்தியா பிடித்துள்ள இடம் வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

ladakh2

இந்தச் சம்பவத்திற்கு பிறகு பிங்கர் 5 பகுதியில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.. எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஸ்ரீநகர்-லே சாலையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது இராணுவம்… விரைவில் எதுவும் நடக்கலாம்.. எதுவாயினும் பாரதம் தனது முழு பலத்தோடு வெற்றிக்காக காத்திருக்கிறது.

  • ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version