அண்மைக் காலமாக ஹிந்து இயக்க பிரமுகர்களின் இடையே கிரிப்டோ கிறிஸ்தவர் என்ற வாக்கியம் பிரபலமாக இருக்கிறது. இந்துக்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறி கிறிஸ்தவ மதத்தை கடைபிடித்துக் கொண்டு ஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு இருப்பவர்கள் பலர் இத்தகையோரை கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடுகின்றனர் சிலர்.
குறிப்பாக ஹிந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் ஹிந்து அமைப்பினர் இத்தகையோர் ஹிந்து மத சடங்குகள் ஆலயங்களில் வழிபாடுகள் போன்றவை உள்நோக்கத்துடன் நடைபெறுவதாகவும் இந்து ஆன்மீக சடங்குகளுக்கு எதிரான போக்கை இவர்கள் வெளிப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பணிபுரியும் கணவர் ஒருவர் டிமிட்ரோ என்ற பெயருடன் இருப்பது குறித்து குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர் இதுகுறித்த அறநிலையத்துறை கடிதத்தையும் இணைத்து சமூக தளங்களில் இப்போது விவாதங்கள் களை கட்டியுள்ளன
திருக்கோயில் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் டி ஆர் ரமேஷ் என்பவர் தமது சமூகத் தளப் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ….
Ramesh Tr ·
தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டணம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் மிக அதிக அளவில் பக்தர்கள் வரும் ஒரு பிரார்த்தனை ஸ்தலம். இங்கு பண வருவாய் மிக அதிகம். இங்கு பணி புரியும் ஒரு கணக்கர் பெயர் டிமிட்ரோ. இப்படி ஒரு பெயர் இந்துக்கள் ஒரு போதும் வைத்துக்கொள்ளுவதில்லை. டிமிட்ரோ, டிசோசா, டிசில்வா, ரோசாலி, – இவையெல்லாம் கிறிஸ்துவப்
பெயர்கள் என்று கேட்ட உடன் தெரியும் பெயர்கள்.
இந்தப் பெயர் உள்ளவர் கோயிலில் கணக்கராக இருந்து வருகிறார். இவர் பணி நியமனம் உள்ளிட்ட எல்லாம் பூடகமா உள்ளன – அறம் கெட்டத் துறை தற்போது – விழித்துக் கொண்டு – விசாரித்து வருகிறதாம் –
திருச்செந்தூர் மயில் சிலை திருட்டில் ஈடுபட்டவன் – இதில் விசாரணை அதிகாரியாக இருக்கப் போகிறானோ என்னவோ – பல கோயில்கள் பணத்தை எடுத்து – வாரம் தோறும் தூத்துக்குடி – சென்னை விமானப் பயணம் செய்தவன் – பல கோயில் பணத்தை எடுத்து – சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஒரு டேங்கர் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என்று எழுத்து மூலமாக உத்திரவு போட்டவன். இணை ஆணையர் பதவியில் உள்ள பரமகேடி – பக்கெட் தனபால்,திருட்டுமகள் – கைத்தடி
விசாரணை எப்படிப் போகிறது என்று பார்ப்போம்.