― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஅறமற்ற துறையின் அயோக்கியத்தனங்கள்! அசட்டு ஹிந்து உணர்வது எப்போது?!

அறமற்ற துறையின் அயோக்கியத்தனங்கள்! அசட்டு ஹிந்து உணர்வது எப்போது?!

- Advertisement -

இந்தச் செய்தியை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். படித்துப் பார்த்து உங்களும் ஏற்புடையதாக இருந்தால் பட்டிதொட்டி எங்கும் பரப்புங்கள்! என்னடா இவன் எப்பொழுதும்போல் இல்லாமல் இப்படி ஒரு நீண்ட பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் நிலைமையின் தீவிரம் அப்படிப்பட்டது!

சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமியர் ஜாகீர் உசேன் என்ற நடனக் கலைஞர் தன்னை ஸ்ரீரங்கம் கோவிலினுள் அனுமதிக்கவில்லையென்று ஒரு நாடகம் நிகழ்த்தினார் அது பரபரப்பாகப் பேசப்பட்டது, ஸ்ரீரங்கம் மட்டுமல்ல மதுரை மீனாக்ஷி, தஞ்சை பெருவுடையார் கோவில் உட்பட அனைத்துக் கோவில்களிலும் இந்த மாற்றுமதத்தினருக்கு அனுமதியில்லை என்ற பலகை தொங்கும், ஆனாலும் பல வெளிநாட்டவர் மாற்றுமதத்தின் அங்கே வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதுதான் உண்மை.

ஆனால், ஊரறிந்த துல்க்கன், திராவிடச் சொம்பாகிய இவன் வேண்டுமென்றே அங்கே சென்றதும், பிரச்சினையைப் பெரிதாக்கியது உண்மை .

அதன்பிறகு என்ன நடந்தது?

நேற்று, நமது மிஷநரி முதல்வர் ஜாகீருக்கு ஹிந்து அறநிலையத்துறையின் இசைக்கலைஞர்கள் கல்லூரிகளின் தலைமைக்கு அவரை நியமித்துள்ளார், இனி இவனின் கார், பங்களா செலவுகள் ஹிந்து அறநிலையத்துறையில் எழுதப்படும், நிற்க .

அடுத்த அதிர்ச்சி உங்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது .

சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் நகரத்தார் கோவில் ஒன்று உள்ளது, இது அறமற்றதுறைக்குக் கட்டுப்படாத பரம்பரைக் கோவில். இதற்கான அஷ்டபந்தன கும்பாபிஷேக ஏற்பாடுகள் கடந்த நான்கு மாதங்களாக நடந்துவருகின்றன .

அறமற்றதுறை கட்டுப்பாட்டில் இல்லாத ஹிந்து கோவில்கள் கும்பாபிஷேகம் என்றாலும் அந்தத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் (கொடுமை) . அதற்காக அந்த அறமற்றதுறையின் அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் (ஹிந்துவாக வாழ்வதற்காக) கட்டி நகரத்தார் விழாவை ஏற்பாடு செய்கிறார்கள் .

அப்பொழுது அங்கே, அறமற்றதுறை அதிகாரிகள் விதித்த நிபந்தனை என்ன தெரியுமா?. கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமானால், கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் பர்வீனா சுல்தானாவின் சொற்பொழிவு இடம்பெற வேண்டுமென்பது, அதுவும் Peak Hour.ல்.

என்னவொரு கேவலமான நிலையில் நாம் வாழ்ந்துவருகிறோம்? .

யார் இந்த பர்வீன்?

சொற்பொழிவின் ஆரம்பத்தில் தேவாரம், திருவாசகம் பாடும் இவர், இறுதியாக இதையேதான் குரானும் கூறுகிறதென்று முடித்துவிடுவார். ஒரு இஸ்லாமிய பள்ளிவாசலில் இதுபோன்று ஒரு ஹிந்து நுழைந்து கருத்துக் கூற முடியுமா? .

ஒரு தேவாலயத்தில் கிறிஸ்தவரல்லாத ஒருவர் கருத்துக் கூற முடியுமா?. எனில், ஹிந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை . பர்வீன் சுல்தானாவிற்கு ஒன்றரை லட்சம் Fees கொடுப்பது மட்டுமன்றி அவளது பயனச் செலவு முதல், லாட்ஜ் செலவு வரை ஹிந்துக்கள்தான் செய்யவேண்டுமாம் .

பாகிஸ்தானில்கூட ஹிந்துக்களுக்கு நடக்காத கொடுமை இது . இவரை இன்னும் சில மேடைகள் ப்ரமோட் செய்து கடைசியில், ஜாகீர் உசேன் போல ஏதாவது ஹிந்து அறநிலையத்துறை Postingல் நுழைத்துவிட்டு, நமது காசில் மதசார்பின்மை பேசுவார்கள்.

இதை ஹிந்துக்கள் உணருவது எப்போது? .

தேசப்பணியில் என்றும்
-> ந.முத்துராமலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version