- Ads -
Home உரத்த சிந்தனை கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

கோமயம் என்பது மாட்டின் சாணம். கோ மூத்ரம் என்பதுதான் மாட்டின் சிறுநீர். இதற்கே வித்யாசம் தெரியாமல் கத்திக் கதறி உருட்டிக் கொண்டும், உளறிக்கொண்டும் இருப்பவர்களிடம் வெறும் இந்து மத வெறுப்பைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. பொதுவாக பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தை ‘கோமூத்ரா மற்றும் கோமியம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் அழைத்து வந்தனர்.

அதிகாலையில், வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீர் தெளித்து, மெழுகித் தூய்மை செய்வார்கள். இதைக் “கிருமிநாசினி” என்பார்கள். இது இன்றும் எங்கள் ஊர்ப்பகுதியில் வழக்கில் உள்ளது. அதோடு பசுவின் மூத்ரத்தை சிமென்ட், டைல்ஸ் போன்ற தரைப் பதிப்பான்கள் வருவதற்கு முன்பு கிருமிநாசினியாக வீடுகளில் தெளிப்பது வழக்கத்தில் இருந்தது. பசுஞ்சாணத்தைக் கெட்டியாகத் தட்டை வடிவில் தட்டி, காய வைத்து, வரட்டியாக்கி சமைப்பதற்கான எரிபொருளாகவும், ஹோமங்களிலும், யாகங்களில் நெருப்பை வளர்க்கப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் வழக்கம்.

பசுவின் பால், மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய்யுடன் பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்தே “பஞ்சகாவ்யம்” என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது மூளை தொடர்பான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக முக்கியமாக இந்த மருந்து இன்றும் நடைமுறையில் உள்ளது. பசுவிடம் இருந்து உருவாகும் ஐந்து பொருள்களால் தயாராகும் இந்த பஞ்சகவ்யம் வாதம், பித்தம், கபம், தோல் நோய்,நீரிழிவு நோய்,சிறுநீரகப் பிரச்சினை போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. மேலும் நினைவாற்றலை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது..!

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

சித்தர்கள் இந்த பஞ்சகவியத்தினைக் கொண்டு “பஞ்சகவ்ய கிருதம்” என்ற மருத்தினைத் தயாரித்தனர். இதையே தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் “நம்மாழ்வாரும்” முன்மொழிந்தார். மேலும், பசுவின் சிறுநீரைக் கொதிக்கவைத்து, அதன் நீராவியைச் சேகரித்து, அதிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வேதிப்பொருள்களைச் சுத்திகரிக்க பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இனிமாவாகவும்(Enema) பயன்படுத்தப்படுகிறது.

பசுவின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாக “அஷ்டாங்க ஹ்ருதயம்” என்ற ஆயுர்வேத நூலில் குறிப்புகள் இருக்கின்றன.பசுவின் சிறுநீருடன் கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் “கோமூத்ரா ஹர்தகி” என்ற மருந்து வயிற்று உப்புசம், கல்லீரல் பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட இலவச மருத்துவமனைகளில் இருந்த மருந்து வகைகளில் ஒன்றாகும். கோமூத்ரம் மற்றும் கடுக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மருந்துக்கு 1000 ஆண்டுகால வரலாறு உண்டு. இதற்கு தகுந்த கல்வெட்டு சான்றுகளே உண்டு.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் என்ன மருந்து பயன்படுத்தி தனது கேன்சர் வியாதியை குணப்படுத்தியதாக ராஜ்யசபாவில் சொல்கிறார் என்பதை நீங்களே கேளுங்கள். அவரையும் மூடநம்பிக்கை உடையவராக எண்ணினால் உங்கள் அறிவை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

ALSO READ:  இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

https://www.facebook.com/groups/457194128421352/permalink/678440626296700

இந்துக்களின் நம்பிக்கைகள் நன்மையே தருமாயினும் வீண் விமர்ச்சனங்களை அள்ளி வீசும் மாற்று மதத்தவர்களைக் காணும்போது சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் என்னிடம் இந்த கேள்வியை வைத்த இஸ்லாமிய நண்பர் ஒருவருக்கு நான் ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இம்மண் சார்ந்த ஆயுர்வேத மருத்துவ முறைகளை விமர்ச்சிப்பீர்களேயானால் நானும் உங்களுக்கு ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதாவது,

மாட்டு மூத்திரத்தில் மருத்துவ பயன்கள் உள்ளது என்பதை கண்டுபிடித்து அதனுடன் கடுக்காய் சேர்த்து கோமூத்ர ஹரிதஹி என்ற பெயரில் நமது மக்களுக்கு இலவசமாக கொடுத்த நமது முப்பாட்டன் இராஜராக சோழனிடம் மாட்டு மூத்ரம் வாங்கி குடித்தவர்கள் இன்று உங்கள் வம்சாவழிகளிலும் வந்திருக்கலாம் என்பதை கூறிக்கொண்டு ஏதோ ஹதீஸாம் அதில் ஒட்டக மூத்திரத்திற்கு மருத்துவ குணம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மையை ஆய்ந்து எனக்கு விளக்கியபின் கோமூத்ரம் குடிப்பவர்களை ஏளனம் செய்யுங்கள்.

புஹாரி 1501ஆவது ஹதீஸ்:

அனஸ்(ரலி) அறிவித்தார். உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை நபி(ஸல) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் கைகளையும் காகளையும் வெட்டினார்கள்; கண் (இமை)களின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களைக் கருங்கற்கள் நிறைந்த ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படிவிட்டுவிட்டார்கள்.

ALSO READ:  கும்பமேளாவில் எட்டிப் பார்த்த தேச ஒற்றுமை

ஆதாரம் : www.tamililquran.com

ஆதாரம் : https://youtu.be/-HeTlCHOKdk

இறுதியாக மாட்டின் சிறுநீரை நேரடியாக பயன்படுத்தவேண்டும் என்று எந்த சித்த வைத்திய குறிப்புகளிலும் இல்லை என்பதையும், இதை இதை நேரடியாக அருந்தினாலோ, பசுஞ்சாணத்தை நேரடியாக உடம்பில் பூசிக்கொள்வதாலோ நோய்கள் குணமாகும் என்பதெல்லாம் எந்த அடிப்படை ஆதாரமும் அற்ற அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயங்களாகும். இதைச்செய்பவர்களே இதைப்பற்றி கவலைப்படாதபோது இதை பெரிதுபடுத்தி உங்கள் மத வெறுப்புகளை உமிழாதீர்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்.

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

  • – பா இந்துவன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version