spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஎல்லா சாக்கடைகளும் 10 ஜன்பத்தை நோக்கியே செல்லுகின்றன!

எல்லா சாக்கடைகளும் 10 ஜன்பத்தை நோக்கியே செல்லுகின்றன!

- Advertisement -
காந்தி பெயருடன் கூடிய நேரு குடும்பம்…

அமீத் ஷாவைக் குறி வைத்து.. ஜஸ்டிஸ் லோயாவின் கொலை தியரி அவிழ்த்து விடப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் இது அரசியலுக்காக உருவாக்கப்பட்ட பொய் பிரசாரம் என்று அதன் கதையை முடித்தது. இதனை சாதிக்க முயற்சித்தது “தி காரவன்”..!

“தி ஒயர்” அடுத்த கதையை ஆரம்பித்தது சிபிஐ தலைவர் அலோக் வர்மாவைக் கொண்டு. இதிலும் சுப்ரீம் கோர்ட் இவர்களின் பொய் பித்தலாட்டங்களை குறிப்பிட்டு அந்த கதை வசனத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது..!

“தி க்விண்ட்”, “தி ஒயர்” இரண்டும் சேர்ந்து கொண்டு… அடுத்த புளுகு மூட்டையான ஜே ஷா கம்பெனியில் 16,000 மடங்கு லாப கணக்கு என்ற பொய் பிரசாரத்தை ஆரம்பித்தனர். அதிலும் குஜராத் ஷை கோர்ட் தலையில் அடித்து விரட்டிவிட்டது. அந்தக் குமிழும் உடைந்தது.

அடுத்ததாக N.ராமின் தி இந்துவும், வரதராஜனின் தி ஒயரும் கூடி ரஃபேல் பற்றிய பொய் பிரசாரத்தை ஆரம்பித்தனர். தி இந்துவிலும், தி ஒயரிலும் பல ரிபோர்ட்களை வெட்டி ஒட்டி.. கேவலமாக தனக்குத் தேவையானவைகளை வெளியிட்டு அசிங்க நாடகத்தை அரங்கேற்ற முயன்றனர். இதிலும் இவர்கள் சந்தித்தது தோல்வியே. உச்ச நீதிமன்றத்தால் கேவலப்பட்டது மட்டுமே கண்டபலன்.

இப்போது.. சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் அவர்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக ராகுல் காந்திக்கு ஒரு சம்மன் அனுப்பியுள்ளது.

இதனை கணக்கில் கொண்டு.. “தி ஸ்க்ரோல்” தற்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களின் மேல் பாலியல் தொடர்பான பழி ஒன்றை சுமத்தியுள்ளது. இதன் மூலம் அவரை பயமுறுத்தி ராகுல் காந்தி மேலான இந்த வழக்கை திசை திருப்ப நாடக அரங்கேற்றம் செய்ய முயற்சிக்கிறது.

மேலே கூறிய 4 கதைகளிலும் இவர்கள் எண்ணபடி நடக்காமல் உச்ச நீதிமன்றம் துரத்தியதால் இந்த கேடுகெட்ட எகோ சிஸ்டம் அதன் நம்பகத்தனமையையே குலைக்க அடுத்த முயற்சியை மேற் கொண்டுள்ளது.

இதில் “The Hindu”, “The Wire”, “The Scroll”, “The Quint” and “The Caravan” இவைகளால் உருவாக்கப்பட்ட இந்த 5 பொய் வழக்குகளிலும் பொதுவாக உள்ள கதை என்ன என்று நாம் கவனித்தோமானால் ஒன்று விளங்கும்.

தி இந்துவைத் தவிர மீதமுள்ள 4 இணையதளங்களும் கடந்த 4 வருடங்களாக மட்டுமே முக்கியத்துவம் அடைந்திருப்பதைக் காணலாம். இத்தனை நாட்களும் இதைத்தான் தொடர்ந்து இவர்கள் செய்து வந்தார்கள். இப்போதுதான் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து இவர்கள் தலையில் குட்டு வைக்கவே அதன் தலைமையையும் மற்றவர்கள் பயமுறுத்துவது போல்.. ப்ளாக் மெயில் செய்வது போல் செய்து பார்க்கிறார்கள்..!

இப்போது புரிகிறதா.. இவையெல்லாம் எப்படி யாருக்காக யாரால் உருவாக்கப்படுகிறது என்று..?

பாரதத்தையே நாசம் செய்ய வந்த சூத்ரதாரி யாரைன்று தெரிகிறதா..?

All the roads lead to ROME…..oops 10 Janpath.

– எஸ்.பிரேமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe