என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
1.அடுத்த வாரம் சென்னையில் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க தயாராக இருந்த மருத்துவமனையில் இருந்து ஒரு உல்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
2.பாம்பன் பாலத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..அது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
3.இராமநாதபுரத்தில் கிட்டத்தட்ட 20 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன..
4.தென்னிந்திய ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக கர்நாடக காவல்துறையினர் அனைத்து மாநிலங்களுக்கும் செய்தி அனுப்பி உள்ளனர்..
அச்சப்படத் தேவையில்லை.. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கவும்.
விழிப்புடனிருப்போம்! தேசம் காப்போம்!!
~ அருண்பிரபு ஹரிஹரன்