spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதமிழகத்தை சீர்குலைக்கும் சாதிஒழிப்பு தீவிரவாதம்! திலகவதி படுகொலையை தூண்டியவர்கள் பட்டியல்!

தமிழகத்தை சீர்குலைக்கும் சாதிஒழிப்பு தீவிரவாதம்! திலகவதி படுகொலையை தூண்டியவர்கள் பட்டியல்!

- Advertisement -
thirumavalavan
சீனிசக்கர சித்தப்பா ஏட்டில எழுதி நக்கப்பா – சுடலையின் பழமொழிகள்! கொலை செய்த நபரோ கொலை செய்த நபரின் குடும்பமோ விடுதலைச் சிறுத்தைகள் கூட எந்த தொடர்ப்பும் இல்ல அவர்கள் விசிக இல்ல … தேவையின்றி பாமக தலைமை என் மேல் குற்றம் சுமத்துறாங்க – திருமாவளவன்!

விருத்தாசலம் திலகவதி படுகொலையை செய்தவர் தனிநபராக இருந்தாலும், இந்த கொடூரத்திற்கு – சித்தாந்தம், அதிகாரவர்க்கம், ஊடகம், அரசியல் அமைப்புகள் என்கிற – பலர் இணைந்த மிகப்பெரிய வலைப் பின்னல் காரணமாக இருக்கிறது.

குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வீணாகக் கொட்டும் போது, அந்த தண்ணீரை அள்ளிக்கொண்டு இருப்பதால் பயனேதும் இல்லை. மாறாக, குழாயை மூடுவதுதான் தீர்வாகும். அதுபோல, நவீனாவை கொலை செய்த விழுப்புரம் செந்தில், சுவாதியை கொலை செய்த ராம்குமார், திலகவதியை கொலை செய்த ஆகாஷ் என வரிசையாக கிளம்பும் இந்த குற்றவாளிகள் தனிநபர்கள் அல்ல. இவர்கள் எல்லோரும் குழாயில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் போன்று வரிசையாக வந்துகொண்டே இருப்பார்கள்.

இவர்களின் கொடூரங்களுக்கு பின்னால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சித்தாந்த வலைப்பின்னலும், சமூக மனப்பான்மையும் தான் இவர்களை எல்லாம் வரிசையாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறது; குற்றச்செயல்களை தூண்டிக்கொண்டே இருக்கிறது. எனவே, அதிகாரவர்க்கம், ஊடகம், அரசியல் அமைப்புகள் என எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் இனவெறி பீடித்த தூண்டல் குற்றவாளிகளை முறியடிக்காமல், இனி உருவாகப் போகும் புதிய நவீனாக்களை, சுவாதிகளை, திலகவதிகளை காப்பாற்ற முடியாது.

திலகவதி படுகொலையை தூண்டியவர்கள் பட்டியல்:

  1. சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்தம்,

  2. நிறுவனமயமாக சட்ட உதவிகள்,

  3. அதிகார வர்க்கத்தின் உதவி,

  4. ஊடகங்களின் பேருதவி,

  5. அரசியல் ஆதரவு,

  6. சினிமாவின் உதவி.

காரணம் 1. சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்தம்

உலகின் மிக மோசமான பேரழிவு ஆயுதம் அணுகுண்டுகள் அல்ல. மனிதனின் சிந்தனையில் உருவாகும் சித்தாந்தம் தான் மிகக் கொடூரமான பேரழிவு ஆயுதம் ஆகும். அந்த வகையில் “சாதி கடந்த திருமணங்கள் மூலமாக சாதியை ஒழிப்பது” என்கிற வெளிப்படையான கருத்துக்கள் மூலமாகவும், அதுவே “எதிர்க்கலகம்” என்கிற மறைமுக திட்டமாகவும் மிக மோசமான சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்தம் வளர்க்கப்பட்டுள்ளது.

வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு வயது வந்தோரின் காதல் உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இனம், மதம், மொழி கடந்து பெரும்பாலான காதல் திருமணங்கள் நடப்பது இல்லை. உலகின் எல்லா நாடுகளிலும் அவரவர் இனம், மதம், மொழி அடையாளத்துக்குள் தான் அதிகப்படியான காதல் திருமணங்கள் நடக்கின்றன.

இத்தகைய நடைமுறையில் இருந்து மாறுபட்டு இனம், மதம், மொழி கடந்து ஒரு சில திருமணங்கள் நடக்கின்றன. ஆனால், அந்த திருமணங்கள் அனைத்தும் இயல்பான இயற்கை காதல் திருமணங்களே ஆகும். அதில் செயற்கையோ வெளிநபர்கள் வற்புறுத்தலோ இருக்காது. அதாவது, கருப்பின ஆண்கள் வெள்ளையின பெண்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற பிரச்சாரத்துக்கு அமெரிக்காவில் வாய்ப்பு இல்லை. மலாய் இளைஞர்கள் தமிழர் பெண்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற பிரச்சாரம் மலேசியாவில் நடக்காது!

ஆனால், உலகில் வேறு எங்குமே நடக்காத ஒரு விநோதமாக – சாதி கடந்துதான் திருமணம் செய்ய வேண்டும். அதற்காக பட்டியலின சாதி இளைஞர்கள் வேறு சாதி பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் – என்கிற பிரச்சாரம் தமிழ்நாட்டில் மிக வலிமையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியோக விழாக்கள், பிரச்சாரங்கள், அரசு ஊக்கத்தொகை என பலவும் முன்வைக்கப்படுகிறது. இந்த பிரச்சாரமும் கூட, பட்டியலின சாதி ஆண்கள் வேறுசாதி பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று தான் நடக்கிறதே தவிர, பட்டியலின சாதி பெண்கள் வேறுசாதி ஆண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று நடப்பது இல்லை.

இந்த சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்த பிரச்சாரம் உண்மையில் ஒரு அப்பட்டமான இனவெறுப்பு பிரச்சாரம் ஆகும். இதற்கு பின்னால் “எதிர்க்கலகம்” என்கிற இன அழிப்பு நோக்கம் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

cuddalore murder
மாணவி திலகவதியை குத்திக் கொன்ற ஆகாஷ்..!

சாதி ஒழிப்பு திருமணம்: கம்போடிய உதாரணம்

“சாதி கடந்த திருமணங்கள் மூலமாக சாதியை ஒழிப்பது” என தமிழ்நாட்டில் கட்டமைக்கப்படும் இனவெறி திருமண முறைக்கு ஈடாக – உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டுமே நடந்துள்ளது. அந்த நாடு கம்போடியா ஆகும்.

1975 முதல் 1979 வரை கம்போடிய நாட்டை ஆட்சி செய்த ‘கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி’, அந்த நாட்டினை முழு கம்யூனிச நாடாக மாற்றுவதாக அறிவித்து. அதன் படி இனம், மொழி, பண்பாடு என்கிற எந்த வேறுபாடும் இல்லாத ஒற்றை கம்போடிய தேசத்தை அமைக்க முடிவு செய்தது கம்யூனிச அரசு. மக்களிடையே இருந்த அனைத்து வேறுபாடுகளும் தடை செய்யப்பட்டன. மதமும் வழிபாடுகளும் பண்பாட்டு சடங்குகளும் தடைசெய்யப்பட்டன. ஒவ்வொருவரும் மற்றவர்களை அழைக்கும் போது ‘தோழர்’ (Comrade) என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆனது.

புரட்சிகர கம்யூனிச நாட்டின் அங்கமாக இனம், மொழி, பண்பாடு என்கிற வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் – கலப்பு திருமணங்கள் கட்டாயமாக்கப்பட்டது. பெண் பார்த்தல், மாப்பிள்ளை பார்த்தல், திருமண சடங்கு, திருமண விருந்து போன்ற அனைத்தும் ஒழிக்கப்பட்டது. இதற்கு பதிலாக ‘சிவப்பு திருமணங்கள்’ (Red Wedding) என்பவை கட்டாயமாக்கப்பட்டன.

கட்டாயமான சிவப்பு திருமண முறையின் படி திருமணம் செய்வதற்காக, கம்யூனிச அரசாங்க அலுவலர்கள், அதற்கு முன்பு அறிமுகமே இருந்திராத சுமார் 100 இளைஞர்கள், இளம்பெண்களை முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென ஓரிடத்தில் கூட வைப்பார்கள். அவ்வாறு கூடும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு ஆளுக்கொரு எண் குத்துமதிப்பாக கொடுக்கப்படும். அந்த எண்களில் இருந்து ஒரு ஆண் – ஒரு பெண் என ஏதேனும் இரண்டு எண்களை குத்துமதிப்பாக அரசு அதிகாரிகளே எடுத்து, அந்த இரண்டு பேரும் கணவன் மனைவி என்று அறிவிப்பார்கள். அவ்வளவுதான் திருமணம்.

அதாவது, கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் ஆணுக்கோ பெண்ணுக்கோ தனது துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை கிடையாது. அரசாங்க அலுவலர்கள் யாரை சொல்கிறார்களோ, அவர்கள் தான் கணவன் மனைவி (விதிவிலக்காக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்கும் ஆணுக்கு மட்டும் பட்டியலில் உள்ள பெண்களில் தான் விரும்பும் பெண்ணை தேர்ந்தெடுக்கும் வசதி உண்டு).

இந்த திருமணத்திற்கு மாற்று எதுவும் இல்லை. மணமக்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மறுபரிசீலனை என்பதே கிடையாது. இதனை மறுத்தால் கொலை செய்யப்படுவார்கள். திருமணம் நடந்த அன்று இரவே முதலிரவு கட்டாயம். மணப்பெண் மறுத்தால், அந்தப் பெண்ணை திருமணம் செய்த ஆண் கட்டாயமாக கற்பழிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் உதவி செய்வார்கள்.

கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இவ்வாறாக 2 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்தக் கொடூர நிகழ்வுகள் குறித்து 2012 ஆம் ஆண்டில் ‘சிவப்பு திருமணம்’ (Red Wedding) என்கிற பெயரில் ஆவணப்படமாக சர்வதேச விழாக்களில் வெளியிடப்பட்டது!

இப்படிப்பட்ட ஒரு கொடூரமான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கம்போடியாவில் 4 ஆண்டுகள் நடந்தது. இந்த கம்யூனிச ஆட்சியில் மொத்தம் 30 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்தம் என்பது, இதுபோன்ற ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவதை தான் நோக்கமாக கொண்டுள்ளது.

எதிர்க்கலகம் என்றால் என்ன?

தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீது, பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக, மனோவியல் ரீதியாக திட்டமிட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது இந்த சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்த வன்முறை கும்பலின் ‘எதிர்க்கலக’ முன்னெடுப்பு ஆகும்.

‘ஒருகாலத்தில் உங்களது முன்னோர்களால் நாங்கள் ஒடுக்கப்பட்டிருந்தோம். எனவே, அதற்கு பதிலடியாக இப்போது நாங்கள் உங்களை தாக்குகிறோம். இதுதான் நீதி, இதுதான் நியாயம். எங்களது தாக்குதலை நீங்கள் மனமுவந்து ஏற்க வேண்டும். உங்களது உடைமைகள், உரிமைகள், பெண்கள் என எல்லாவற்றையும் எங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்’ – என்பது இவர்கள் வைக்கும் வரலாற்று ரீதியான எதிர்க்கலக நியாயம் ஆகும்.

இந்த ‘எதிர்க்கலகத்தில் பெண்கள் ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றனர். தமிழர் பண்பாட்டில் பெண்களுக்கு முதன்மையான இடமிருப்பதால், பெண்களையே இவர்கள் முதன்மையான இலக்காக வைக்கின்றனர். 13 வயது முதல் 21 வயது வரையுள்ள – சிறுமிகளும் இளம் பெண்களும் தான் இவர்களது இலக்கு.

காரணம் 2. நிறுவனமயமாக சட்ட உதவிகள்

தமிழ்நாட்டில் இயல்பாக நிகழும் குற்றச்செயல்களில், குற்றம் செய்தவர்களுக்கு அந்த குற்றவாளிகளின் நண்பர்களோ உறவினர்களோ சட்ட உதவி செய்வார்கள். ஆனால், சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்த குற்றச்செயல்களில், குற்றவாளிகளை நேரில் அறிந்திராத நிறுவனமயமான மிகப்பெரிய சட்டஉதவி குழுக்கள் களத்தில் இறங்குகின்றன.

நவீனாவை கொலை செய்த விழுப்புரம் செந்தில், சுவாதியை கொலை செய்த ராம்குமார், திலகவதியை கொலை செய்த ஆகாஷ் என இதுபோன்ற குற்றாவாளிகள் அனைவருக்கும் முழுமையான சட்ட ஆலோசனைகள் அளித்தல், வழக்கு செலவுகளை ஏற்றல், பல லட்சம் ஊதியம் வாங்கும் புகழ்பெற்ற வழக்கறிஞர்களை வைத்து வாதிடுதல் என பலமுனை உதவிகள் அளிக்கப்படுகின்றன.

திலகவதியை கொலைசெய்த ஆகாஷ் என்பவனை காப்பாற்ற, திலகவதியும் ஆகாஷும் 4 ஆண்டுகளாக மனமொத்து காதலித்தார்கள் என்று மனு அளிக்கிறார்கள். இப்போது 19 வயதில் கொலைசெய்யப்பட்ட திலகவதி 4 ஆண்டுகளாக காதலித்தார் என்று சொன்னால், அவர் 14 வயது முதலே காதலித்து வருகிறார் என்பது பொருளாகும். ஒரு சிறுமி ஒரு பொறுக்கியை காதலித்து வந்தார் என்று சொல்லும் அளவுக்கு மிகக் கொடூரமான மனநிலையுடன் இந்த இனவெறி கும்பல் இயங்குகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்த பிரச்சினையை திசை திருப்ப, அப்பாவி ஏழை கூலித்தொழிலாளி சாதி ஆணவக் கொலை செய்திருக்கிறார் என்றும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறாக, ஒரு குற்றவாளிக்கு அளிக்கப்படும் ஆதரவு, நாடெங்கும் பலநூறு குற்றவாளிகளை உருவாக்குகிறது. சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்தத்தை காரணமாக்கி, இதர சாதி பெண்களை தொல்லை செய்யலாம், பாலியல் வன்முறையை திணிக்கலாம், கடைசிக் கட்டத்தில் கொலையும் செய்யலாம். நம்மை காப்பாற்ற ஒரு மிகப்பெரிய சட்டவல்லுநர் குழு இருக்கிறது. எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்கிற மிக மோசமான நம்பிக்கையை இவர்கள் அளிக்கிறார்கள்.

காரணம் 3. அதிகார வர்க்கத்தின் உதவி

பட்டியலினத்தவருக்கான 70 ஆண்டு விகிதாச்சார இடஒதுக்கீட்டால் காவல்துறை, சட்டத்துறை, அரசு நிர்வாகம், நீதித்துறை எல்லா இடங்களிலும் இடம் பெற்றிருப்போரில் ஒரு சிலர், தமது சாதிக்கு நன்றிக்கடன் செலுத்த நினைத்து, சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்தத்திற்கு முழு ஆதரவை அளிக்கின்றனர் (இடஒதுக்கீடு ஓர் உரிமை. அது நியாயமானது என்பதுதான் நமது கருத்தும் கூட. ஆனால், சாதி ரீதியான அநீதிக்கு சிலர் துணை போவது நியாயமற்றது)

திலகவதியை கொலை செய்த கொலைக்காரன் ஆகாஷ் – ‘நான் வீட்டிலிருந்து கத்தியை எடுத்துவந்து திலகவதியை குத்தினேன்’ (திட்டமிட்ட கொலை) என்று சொல்வதை இடைமறித்து, ‘திலகவதி வீட்டு வாசலில் திடீரென கிடைத்த கத்தியால் குத்தினேன் என்று சொல்’ (உணர்ச்சிவசப்பட்ட திடீர் நிகழ்வு) என்று காவல்துறையினர் சொல்லவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருப்பது – அதிகாரவர்க்கத்தின் சாதிவெறி செயல்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

இதுபோல, காவல்துறை, சட்டத்துறை, அரசு நிர்வாகம், நீதித்துறை என அதிகார மட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஒருசிலர் அமர்ந்துகொண்டு, சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்த படுகொலைகளுக்கு முழு உதவி செய்கிறார்கள். இதனால், இக்குற்றங்களை செய்வதற்கு புதிதாக பலர் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்!

காரணம் 4. ஊடகங்களின் பேருதவி

சாதி ஒழிப்பு தீவிரவாத சித்தாந்த புரட்சியாளர்கள் தமிழ்நாட்டின் ஊடகங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சாதிகள் தொடர்புடைய நிகழ்வுகள் எதுவானாலும், பட்டியலினம் சார்ந்தோரின் தவறுகளை மறைப்பதும், பிற சாதிகளின் சாதாரண பிழைகளை மாபெரும் குற்றம் ஆக்குவதும் இவர்களது முழுநேர தொழிலாக உள்ளது.

எடுத்துக்காட்டாக, தருமபுரியில் தேமுதிகவை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்ததைக் கண்டு உணர்ச்சி வசப்பட்ட கிராம மக்கள், அதற்கு காரணமான இன்னொரு கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 40 வீடுகள் சேதம் அடைந்தன. தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் நடக்கும் மோதல்கள் போன்று, இந்த நிகழ்வில் யாரும் கொலை செய்யப்படவில்லை. ஒரே ஒருவருக்கு கூட சிறு நகக்கீரல் கூட இல்லை. உண்மையில், இந்த மோதலில் ஒரே ஒரு சொட்டு ரத்தமும் சிந்தப்படவில்லை.

ஆனாலும், தமிழ்நாட்டின் பெரும் சாதிக்கலவரமாக இதைத்தான் ஊடகங்கள் இன்றுவரை சித்தரிக்கின்றன. தருமபுரி இளவரசன் என்பவரை வன்னியர்கள் கொலை செய்தார்கள் என இன்னமும் ஊடகங்கள் அவதூறு பிரச்சாரம் செய்கின்றன.

அதே போன்று, மரக்காணத்தில் பாமகவினர் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். எதிர்த்தரப்பில் ஒருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. ஆனாலும், அது பாமக நடத்திய கலவரம் என்றுதான் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

பொன்பரப்பியில், விசிகவினர் தடைசெய்யப்பட்ட இடத்தில் பானையை வைத்து வாக்கு கேட்டனர். அந்த பானையை உடைத்ததாக கூறி மாற்றுத்திறனாளியை தாக்கினர். பெண்களை ஆபாசமாக பேசினர். தட்டிக்கேட்டவர்களை பாட்டிலால் குத்தி, மண்டையை உடைத்தனர். இத்தனைக்கும் பிறகு – அக்கிரமம் செய்தவர்களை ஊருக்குள் விரட்டி சென்றவர்கள், கோபத்தில் தள்ளிவிட்ட ஓடுகள் மட்டும்தான் தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக உள்ளது.

இவ்வாறாக, சாதி ஒழிப்பு தீவிரவாத சித்தாந்த புரட்சியில் ஆக்கப்பூர்வமாக ஊடகங்கள் பங்கேற்பதால், கொலை செய்யும் குற்றவாளிகள் மிகத் துணிச்சலாக குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

காரணம் 5. அரசியல் ஆதரவு

தமிழ்நாட்டின் அரசியல் அமைப்புகள் பெரும்பாலானவை சாதிஒழிப்பு தீவிரவாத சித்தாந்த புரட்சிக்கு முழு ஆதரவாக உள்ளன. சாலையில் இருசக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டால், ‘கார் ஓட்டியவரின் மீது தான் தவறு’ என வழிப்போக்கர்கள் தாமாக முடிவுசெய்து கொள்வார்கள்! அதுபோல, பட்டியலினத்தவர்களுக்கும் இதர சாதியினருக்கும் மோதல் என்றால், இதர சாதியினர் மீதுதான் தவறு என்ற தானாகவே அரசியல் அமைப்புகள் முடிவெடுக்கின்றன. அதிலும், வன்னியர்கள் என்றால், விசாரணையே இல்லாமல் நேரடியாக தண்டனை தான்!

பொதுவான அரசியல் கட்சிகள் இவ்வாறு என்றால், பெரும்பாலான தலித் மற்றும் இடதுசாரி கட்சிகள் முற்றுமுழுதாக இனவெறியை முன்னெடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, விருத்தாசலம் திலகவதி கொலைசெய்யப்பட்ட நேரத்தில் – ‘கொலைகாரன் ஆகாஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்’ என்கிறார் திருமாவளவன்! விழுப்புரம் நவீனா, நுங்கம்பாக்கம் சுவாதி என எல்லா நிகழ்வுகளிலும் நேரடியாக குற்றவாளிகளை காப்பாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியது விசிக.

இவ்வாறு கட்சிகள் மட்டுமின்றி, எவிடன்ஸ் போன்ற அரசு சாரா அமைப்புகள், மே 17 இயக்கம் போன்ற இயக்கங்கள் – முழுநேர பணியாளர்கள், மிகஅதிக பண வலிமை, சட்டநிபுணர்கள் உதவி என ஒரு மிகப்பெரிய கட்டமைப்புடன் இனவெறி நோக்கில் இயங்குகின்றன.

மொத்தத்தில், அரசியல் கட்சிகள், இடதுசாரி மற்றும் தலித் இயக்கங்கள், அரசுசாரா அமைப்புகள், இயக்கங்கள் – என மிகப்பெரிய அரசியல் வலைப்பின்னல் மூலமாக குற்றவாளிகள் குற்றம் செய்ய தூண்டப்படுகின்றனர். குற்றம் செய்தவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.

காரணம் 6. சினிமாவின் உதவி

சட்டத்துறை, அதிகாரவர்க்கம், ஊடகம், அரசியல் கட்சிகள், அரசுசாரா அமைப்புகள், இயக்கங்கள் என ஒரு நீண்ட பட்டியலில் உள்ள அனைவரும், குற்றவாளிகளை நேரடியாக தூண்டிவிட்டு, குற்றவாளிகளுக்கு நேரடியாக உதவிகரமாக உள்ளனர். இதிலிருந்து மாறுபட்டு, மறைமுகமாக குற்றத்தை தூண்டும் கருவியாக சினிமா உள்ளது.

பள்ளிச்சிறுமிகள் காதலிப்பது போன்ற காட்சிகள், பொறுக்கிகள் சிறுமிகளை துரத்துவதை ‘கதாநாயகனின் அடையாளமாக’ காட்டும் இழிவான காட்சிகள் போன்றவை பதின்வயதினரின் மனதை பாதிக்கிறது. குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் தனுஷ் உள்ளிட்டவர்கள் இதுபோன்ற படங்களில் அதிகம் நடிக்கின்றனர். இவர்களின் பல படங்கள் பெண்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்துகின்றன.

இத்தகைய திரைப்படங்களும் சாதி ஒழிப்பு தீவிரவாத சித்தாந்த புரட்சிக் கும்பலுக்கு தார்மீக ஆதரவாக மாறுகின்றன.

மொத்தத்தில் – விருத்தாசலம் திலகவதி படுகொலையை செய்தவர் ஆகாஷ் என்கிற பொறுக்கியாக இருந்தாலும், இந்த கொடூரத்திற்கு – சித்தாந்தம், அதிகாரவர்க்கம், ஊடகம், அரசியல் அமைப்புகள் என்கிற – பலர் இணைந்த மிகப்பெரிய வலைப்பின்னல் காரணமாக இருக்கிறது. இந்த சதிகார வலைப்பின்னலை முறியடிக்காமல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியாது.

குறிப்பாக, சாதி ஒழிப்பு தீவிரவாத சித்தாந்தம் மற்றும் எதிர்க்கலக புரட்சி முயற்சிகளை திட்டமிட்டு முன்கூட்டியே முறியடிக்க வேண்டும். அவ்வாறே, இளம்பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.

இதற்கான முன்னெடுப்புகளை அனைத்து தரப்பினரும் ஒன்றிணந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

கட்டுரை- இர. அருள் 

Author e-mail: [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe