உன்னுடைய,
உன்னைப்போல் ஒருவன் – பார்த்து –
நீயும்,
என்னைப் போல் ஒருவன் என்று
நினைத்திருந்தேன் –
உன் இந்தியன் படம் பார்த்து
இவனைப் போல் யார்? என்று இறுமாந்திருந்தேன் –
இறுதியில் விஸ்வரூபம் எடுத்தும் எங்களை வியக்க வைத்தாய் –
உன் தசா அவதாரங்களையும்
உண்மை என்று நம்பி இருந்தேன் –
உன் பஞ்சதந்திரங்கள் அறியாமல் _
கமல் ரசிகன் என்று பாவம் நாசமானேன்.
வறுமையின் நிறம் சிவப்பு என்று நீ கூறிய போதே –
என்னுடைய நிறமும் சிவப்பு என்று கூறியிருந்தால் –
அன்றே உன்னை அடையாளம் கண்டிருப்போம் –
இன்று உன்னை டிவிட்டரில் மட்டுமல்ல
கூகுளில் தேடினாலும் தெரியாதென்ற நிலை வந்திருக்கும் –
உன் அடையாளத்தை வெளிக்காட்டவே உனக்கு –
அரை நூற்றாண்டு தேவைப்பட்டிருக்கிறது –
உன் திரையுலக அனுபவம் என்பது கடுகளவு ,
ஆனால்,
இந்து மதம் என்பது மஹா சமுத்திரம் –
முட்டுச் சந்தில் நின்று இந்துக்களுக்கு சவால் விடாமல் –
முற்றிய உன் மனச்சிதைவு நோய்க்கு _
மருந்து கிடைக்கிறதா என்று பார் –
காமஹாசா –
இனி நீ ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது –
- ??? (சமூகத் தளத்தில் வைரலான கவிதை)