சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக ஐபோன் 11 ஸ்மார்ட்போனில் ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது, அதன்படி இந்நிவனம் இந்நிறுவனம் பதிவு செயப்பட்ட டெவலப்பர்களான ஏழாவது ஐஒஎஸ் 13 பீட்டாவை வெளியிட்டுள்ளது.
ஐஒஎஸ் 13 கோட் சார்ந்த ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஸ்னீரின் ஷாட்டில் ஹோல்ட்ஃபார் ரிலீஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஐபோன் மாடல் செப்டம்பர் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.விரைவில் வெளிவரும் ஐபோன்கள் ஆனது ஐபோன் 11, ஐபோன் 11ஆர், ஐபோன் 11 மேக்ஸ் அல்லது ஐபோன் எக்ஸ்ஐ போன்ற பெயர்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு அடுத்த ஆப்பிள் ஐபோன் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.வெளிவரும் ஐபோன் மாடல்கள் 1,099 மற்றும் 999 அமெரிக்க டாலர்கள் என்கிற புள்ளியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.வெளியாகப்போகும் ஐபோன்கள் ஐபோன் 11, ஐபோன் 11அர், ஐபோன்11 ப்ரோ போன்ற மாடல்கள் 5.8-இன்ச், 6.1-இன்ச், 6.5-இன்ச் எல்சி டிஸ்பிளே வடிவமைப்புகளுடன் வெளிவரும்.பின்பு மூன்று ரியர் கேமரா ஆதரவுகளுடன் புதிய ஐபோன் மாடல்கள் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் தனது பேஸ் ஐடி அம்சத்தை மேம்படுத்த, அதன் லைட்டினிங் போர்ட-ஐ அதன் ஐபோன்களில் தக்கவைக்கவும் வாய்ப்புள்ளது.