spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்ஆதார பயன்படுத்தி... போஸ்ட் ஆபீஸ்லயே வங்கி கணக்குல இருக்குற பணத்த எடுக்கலாம்!

ஆதார பயன்படுத்தி… போஸ்ட் ஆபீஸ்லயே வங்கி கணக்குல இருக்குற பணத்த எடுக்கலாம்!

- Advertisement -

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் எனப்படும் வீடு தேடி வரும் அஞ்சலக வசதி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில்படி காஞ்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் 6474 கணக்குகளும் திருவள்ளூரில் 4672 கணக்குகளும் என மொத்தம் 11,116 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் 17 லட்சம் ரூபாய் டெபாசிட் பெறப்பட்டுள்ளது. தற்போது அஞ்சலகங்களில் ஏஇபிஎஸ் எனப்படும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்யும் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் தங்களுடைய ஆதார் எண் தங்கள் கைவிரல் ரேகை பதிவை பயன்படுத்தி அஞ்சலகங்களில் பணம் எடுக்கலாம்.

ஒரு நாளைக்கு 100 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த சேவைக்கு கட்டணம் கிடையாது. இந்த சேவையை காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் திருவள்ளூர் என இரு தலைமை தபால் நிலையங்கள் 52 துணை அஞ்சலகங்கள் 271 கிளை தபால் அலுவலகங்களில் பெறலாம்.

காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்த சேவையை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜிகணேஷ் தொடங்கி வைத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe