spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeபொது தகவல்கள்வேலையின்றி இருந்தால் பி.எஃப். பணத்தை உடனே எடுக்கலாம்! விதியில் திருத்தம்!

வேலையின்றி இருந்தால் பி.எஃப். பணத்தை உடனே எடுக்கலாம்! விதியில் திருத்தம்!

- Advertisement -

புது தில்லி : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி- ஈபிஎஃப்ஓ.,வை வேலையின்றி இருந்தால் உடனே எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய விதிகளின்படி ஊழியர் ஒருவர் 2 மாதங்கள் வேலையின்றி இருந்தால் மட்டுமே அவர்களின் பிஎஃப் பணத்தை பெற முடியும். இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒருவர் வேலையில் இருந்து வெளியேறி, வேலையின்றி இருக்கும் போது, பிஎஃப் பணத்தைப் பெறுபவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலே மொத்த பிஎஃப் தொகையில் 75 சதவீதத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மீதமுள்ள 25 சதவீத தொகையை வழக்கமான விதியின்படி, அடுத்த 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் பெற முடியும். ஒருவேளை 75 சதவீதம் பிஎஃப் பணத்தை பெற்ற பிறகு ஒருவருக்கு வேலை கிடைத்து விட்டால், வேறு வேலைக்குச் சென்ற பிறகு அந்த பிஎஃப் கணக்கை தொடரவும் வழி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் நேற்று நடைபெற்ற இபிஎஃப் இந்தியா கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தலைமையிலான கூட்டத்திற்குப் பிறகு ஈபிஎஃப் அமைப்பின் டிவிட்டர் தகவலில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe