நடிகை ஸ்ரீரெட்டி குறித்த கேள்விக்கு இயக்குநர் ராம் கோபால் டபுள் மீனிங்கில் பதில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஸ்ரீரெட்டி நடிப்பில் ஒரு படமும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது தான் ஸ்ரீரெட்டி ரெட்டியின் டைரி உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் அதற்குள் இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்டார் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
அதோடு தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னுடன் செக்ஸ் வைத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு நடுரோட்டில் அமர்ந்து மேலாடையை கழட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். நடிகர்களும் இயக்குநர்களும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி மாறி மாறி அனுபவித்தாக குற்றம்சாட்டி கதறினார்.
அதோடு சில இயக்குநர்கள் தனக்கு சாப்பாடு கூட வாங்கி கொடுக்காமல் பட்டினி போட்டு செக்ஸ் வைத்துக் கொண்டதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். இதனால் நாடு முழுக்க பிரபலமானார் ஸ்ரீரெட்டி. இதனை தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார்.
ஆனாலும் அடங்கவில்லை ஸ்ரீரெட்டி. தன்னை நாசமாகக்கியவர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு மிரளவிட்டார். இருப்பினும் ஆரம்பம் முதலே சர்ச்சை இயக்குநரான ராம் கோபால் வர்மா மீது ஸ்ரீரெட்டிக்கு ஒரு சாஃப்ட் கார்னர். இருவருக்கும் நெருக்கமான உறவு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இயக்குநர் ராம் கோபால் வர்மாவை சாடி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் ஸ்ரீரெட்டி. அதில் இயக்குநர் ராம் கோபால் வர்மா என் காலை பிடித்து என்னை தேவதை என்றார், இப்போது வேறு ஒருத்தியின் காலை பிடித்துள்ளார். அவர் என்னை ஏமாற்றி விட்டார். நான் மிகுந்த வேதனையில் உள்ளேன் என்று பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து நடிகை ஸ்ரீரெட்டி அண்மையில் தனது ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ராம்கோபால் நீங்கள் கொரானாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள், நான் இன்னும் உங்களை காதலித்து கொண்டுதான் இருக்கிறேன் என்றும் கூறிய ஸ்ரீரெட்டி அவரை பகிரங்கமாக படுக்கைக்கு அழைத்தார்.
மேலும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும் கூறினார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஸ்ரீரெட்டியின் திருமணம், டேட்டிங் புரபோஸல் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த இயக்குநர் ராம் கோபால் வர்மா, எந்த பெண்ணுடனும் இதுவரை வெளியில் டேட்டிங் சென்றதில்லை. எப்போதும் பெண்களுடன் உள்ளேயே இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். ராம் கோபால் வர்மாவின் இந்த டபுள் மீனிங் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தான் திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்றும் கூறியுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.