April 30, 2025, 9:33 PM
31.3 C
Chennai

அப்பா இன்னிக்கு வருவாரா..? தினமும் கேட்டு ஏங்கும் பிருதிவிராஜ் மகள்!

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜோர்டானில் நடந்தபோது லாக்டவுன் அறிவிக்கப்பட்டது

நடிகர் பிருத்விராஜின் மனைவி, சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ள உருக்கமானப் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகர் பிருத்விராஜ்.

தமிழ், மலையாளம் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார்.

இவர் நடித்து சமீபத்தில் வெளியான மலையாள படம், அய்யப்பனும் கோஷியும் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் ஹீரோவாக நடித்து வந்த பிருத்விராஜ் இயக்குநர் ஆன படம், லூசிஃபர். மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் மஞ்சுவாரியர், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்திருந்தனர்.


இந்தப் படமும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் அவர் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். எழுத்தாளர் பென்யாமின் இதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் இது. இந்தப் படம் தனக்கு முக்கியமானது என்று பிருத்விராஜ் தெரிவித்திருந்தார். இதை பிளஸ்சி இயக்குகிறார்.

ALSO READ:  த்தூ... கோலிவுட்! த்தூ... டைரக்டர்ஸ்! த்தூ... நடிகர்கள்! சாபம் விடும் சமூகத்தள வாசிகள்!


இதில் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினித் ஶ்ரீனீவாசன், உட்பட பலர் நடிக்கின்றனர். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜோர்டானில் நடந்தபோது லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் பிருத்விராஜ், பிளஸ்சி உட்பட 53 பேரை கொண்ட படக்குழு அங்கு சிக்கிக்கொண்டிருக்கிறது.

அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் உருக்கமானப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ளார். அதில், ‘ஒவ்வொரு நாளும் என் மகள் லாக்டவுன் முடிந்துவிட்டதா? அப்பா இன்னைக்கு வந்துவிடுவாரா? என்று கேட்கிறாள். இப்போது நானும் அவளும் (அலங்கிருதா) அவருக்காகக் காத்திருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஏராளமான ரசிகர்கள், இந்தப் பதிவுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ‘குழந்தை அப்பாவைப் போலவே இருக்கிறது, கவலைப்பட வேண்டாம் மகளே, சீக்கிரம் வந்துவிடுவார்’ என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர், உங்களைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம். அப்பா சீக்கிரம் வந்துவிடுவார் என்று தெரிவித்துள்ளனர். இந்த பதிவு வைரலாகி வருகிறது

ALSO READ:  பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories