தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
கவர்ச்சியாக நடிக்க ஒரு சம்பளம், நெருக்கமாக நடிக்க ஒரு சம்பளம் என்று தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை பூஜாஹெக்டே கேட்பதால் தயாரிப்பாளர்கள் மிரண்டு போய்
உள்ளனர்.
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இவரது பெயர் அடிபட்டது. ஆனால் ராஷி
கன்னா தேர்வாகி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன. இதனால் சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘கபி ஈத் கபி’ என்ற படத்தில் நடிக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். படத்தில் கவர்ச்சி காட்சிகளும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளும் உள்ளன என்று அவரிடம் தெரிவித்து கதை சொல்லி உள்ளனர்.
நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர். இதேபோல் கவர்ச்சியாக நடிக்க ஒரு சம்பளம், நெருக்கமாக நடிக்க இன்னும் கூடுதல் சம்பளம் என்று கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் மிரண்டு போய் உள்ளனர்.