இயக்குனர் ஷங்கர் அளவுக்கு பிரமாண்ட படங்களை வெற்றி படமாகியவர் ராஜமவுலி. இவர் இயக்கிய ‘நான் ஈ, பாகுபலி வாரி குவித்தது. ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடும் இயக்குனராகிவிட்டார்.
ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில் RRR படம் தயாராகி வருகிறது, கொரொனா காரணமாக இப்படம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அவரது குடும்பத்திற்கும் நோய் அறிகுறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ராஜமெளலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தோம். சில நாட்களில் காய்ச்சல் தானாகவே தணிந்தது, ஆனாலும் நாங்கள் சோதனை செய்யப்பட்டோம். இதன் விளைவாக இன்று லேசான கோவிட் 19 பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து டாக்டர்கள் பரிந்துரைத்தபடி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.
நாங்கள் அனைவரும் எந்த அறிகுறிகளும் இல்லாமல் நன்றாக உணர்கிறோம், ஆனால் எல்லா முன்னெச்சரிக்கை மற்றும் வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம்.
நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
My family members and I developed a slight fever few days ago. It subsided by itself but we got tested nevertheless. The result has shown a mild COVID positive today. We have home quarantined as prescribed by the doctors.
— rajamouli ss (@ssrajamouli) July 29, 2020
All of us are feeling better with no symptoms but are following all precautions and instructions…
— rajamouli ss (@ssrajamouli) July 29, 2020
Just waiting to develop antibodies so that we can donate our plasma… ??????