பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலக திரைப்பட கலைஞர்களை இந்தியாவின் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமெளலி. சீனா உள்பட இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. ராஜமெளலியும் அந்த விழாக்களில் கலந்து கொண்டார்
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் எதிரிநாடான பாகிஸ்தானில் இருந்து ராஜமெளலிக்கு அழைப்பு வந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி இயக்குனர் ர்ஸ்.எஸ்.ராஜமெளலிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறியதாவது:
Baahubali has given me opportunities to travel to a number of countries… The most exciting of them all is now, Pakistan. Thank you Pakistan international film festival, Karachi for the invite.
— rajamouli ss (@ssrajamouli) March 28, 2018