தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் அமலா பால். ஆடை படத்தின் மூலம் தமிழில் சிங்கிள் ஹீரோயினாக ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல படம் ரசிகர்களை கவரவில்லை. படம் ஓரளவுக்கு நல்ல வசூலை ஈட்டியது.
அமலா பால் தற்போது இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன்பின் விவாகரத்தும் செய்துகொண்டார். பின்னர் ஏ.எல்.விஜயும் மறுமணம் செய்து கொண்டார். இதற்கு அமலாபால் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவுகளும் செய்து வந்தார்.
இந்நிலையில் அமலா பால் தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அமலா பால் யாரை காதலிக்கிறார் என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
தற்போது சிஏஏ., என்.ஆர்.சி., ஆகியவை குறித்து பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டுள்ளார் அமலாபால். அது ரசிகர்களை கூடவே குஷிப்படுத்தியுள்ளது.
இரண்டு மீன்கள் பேசிக் கொள்வது போல் ஒரு படம் போட்டு, கருத்து பதிவிட்டிருந்தார்.
அதில்… அம்மா, ஒரு கடல் எல்லையில் இருந்து இன்னொரு கடல் எல்லைக்கு நாம் கடந்து செல்கிறோம் என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று கேட்கிறது… குட்டி மீன்!
அதற்கு அம்மா மீன்… நமக்கு கிடையாது. எல்லைகள் சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்டவை, அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் எவரிடமும் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. என்கிறது.
இதற்கு பதில் அளித்துள்ள சமூகத் தள வாசிகளின் கருத்துகள் சில…
நான் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களுடன் தங்கலாம் அல்லவா
நீங்க உங்க எல்லைகள் பற்றி எச்சரிக்கையா எடுத்துக் கொள்ளாதவர் என்பதால்.. உங்கவீட்டுப் பக்கம் நான் வரலாம்னு இருக்கேன்…
ஒவ்வொரு கடல் எல்லையும் வேறானவை. ஒவ்வொரு கடல் நீரின் வெப்பமும் வேறாக இருக்கும். எல்லா கடலும் ஒன்றல்ல…
வாழ்க்கையைப் பற்றின முக்கியமான பாடம் உள்ள போஸ்ட் இது…
அடடா என்னா அழகு..?!