- Ads -
Home சினிமா சினி நியூஸ் கமலை வைத்து ஏன் படம் இயக்கவில்லை? -வெற்றிமாறன் விளக்கம்

கமலை வைத்து ஏன் படம் இயக்கவில்லை? -வெற்றிமாறன் விளக்கம்

vetri

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என சிறப்பான திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் படத்தில் மாபெரும் வெற்றி தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டாட் இயக்குனராக மாற்றியுள்ளது. தற்போது சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்து, சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். அதன்பின் தனுஷிடம் ஒரு புதிய படம் என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

தனுஷிடம் திறமையான நடிப்பை வாங்கிய வெற்றிமாறன், நடிப்பு களஞ்சியமாக விளங்கும் கமல்ஹாசனை வைத்து ஏன் படம் இயக்கவில்லை என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுடையே உள்ளது.

சமீபத்தில் பிரபல யுடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது ‘நீங்கள் ஏன் கமல்ஹாசனுடன் இணையவில்லை?’ என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அவர் ‘பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவது என்பது நாம் நினைத்தால் மட்டும் நடக்காது. அந்த ஆர்வம் அவர்களுக்கு வரவேண்டும். அவர்களின் கால்ஷீட் ஃபிரியாக இருக்க வேண்டும். அவர்களுக்கான சரியான கதை அமைய வேண்டும். அது நிகழும்போதுதான் செய்ய முடியும். கண்டிப்பாக கமல்ஹாசன் மாதிரியான நடிகருடன் இணைந்து பணிபுரிவது ஒரு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்’ என பதிலளித்தார்.

Source: Vellithirai News

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version