கிராமப்புறங்களில் உள்ள பழமையான கோயில்களை சமூக விரோதிகளும் கிறிஸ்தவ இஸ்லாமிய வேற்று மதத்தவர்களும் குறிபார்த்து கபளீகரம் செய்வது தமிழகத்தில் வழக்கமாய் இருக்கிறது… அதிகம் பக்தர்கள் சென்று வராத, சற்று போக்குவரத்து வசதியற்ற ஒதுக்குப்புறமான கிராமங்களில் உள்ள பழமையான கோயில்களை ஒருபுறம் அறநிலையத்துறை கபளீகரம் செய்கிறது என்றால் இன்னொருபுறம் வேற்று மதத்தினர் ஆக்கிரமிப்பு செய்து ஆலய சொத்துக்களை அபகரித்து வருகின்றனர்
அப்படியான ஒரு முன்னோட்ட சம்பவம்தான் செங்கல்பட்டு அருகிலுள்ள அரசர் கோயில் என்ற பழமையான ஊரில் நடந்து இருக்கிறது இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஹிந்து உணர்வாளர் ஒருவர் செய்த புகார் பதிவு இது
பட்டாச்சாரியாரை கோவிலில் புகுந்து தாக்கி, அவரின் பூணூலை அறுத்து, திமுகவை சேர்ந்த கிருஸ்தவ நபர் அட்டுழியம்
காஞ்சி மாவட்டம் அரசர் கோவில் கிராமத்தில் 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் நித்திய பூஜை செய்யும் கண்ணன் பட்டாச்சாரியார், கோவிலின் உள்ளே வந்த சகாய நகர் அந்தோனி மற்றும் அவனின் நண்பனையும் கோவில் கருவறை உள்ளே வந்து மூலவரை படம் பிடித்ததை தடுத்துள்ளார். அதற்கு அவரை கேவலமாக திட்டியும், அடித்தும், அவரின் பூநூலை அறுத்தும், அவரின் சகோதரி மற்றும் மனைவியையும் திட்டி உள்ளனர்.
இது சம்மந்தமாக படாளம் காவல்துறையில் புகார் அளித்த பட்டாச்சாரியாரை அலைக்கழிக்கும் காவலர்களை கண்டித்தும், அவருக்கு ஆதரவாக தற்போது இந்து முன்னணி பாஜக பொறுப்பாளர்கள் காவல் நிலையத்தில் உள்ளோம். திமுகவுக்கு ஆதரவாக அவர்களின் தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.
பதட்டமான சூழ்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலையம்.
- கருப்பசாமி சண்முகம் (Karuppasamy Shanmukam)