January 19, 2025, 8:40 AM
23.5 C
Chennai

மதுரை சந்தையூர் சாதி பிரச்னை: திருமாவளவனுக்கு இந்து மக்கள் கட்சி கடிதம்

பெருமதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
அண்ணன் தொல்.திருமாவளவன்
அவர்களுக்கு

வணக்கம். நலமே நாடுகிறேன்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள சந்தையூர் என்கிற ஊரில் ஆலய வழிபாடு மற்றும் பாதை பிரச்சினை – தீண்டாமை சுவர் பிரச்சினை தங்களின் கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்து பறையர் சமுதாய மக்களுக்கும் – இந்து அருந்ததியர் சமுதாய மக்களுக்குமான தீண்டாமை பிரச்சினை உண்மையில் மனம் வேதனை அடையச் செய்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து எங்கெல்லாம் தீண்டாமை பிரச்சினை எழுகின்ற நேரங்களில் எல்லாம் மதுரை உத்தப்புரம் – நாகை மாவட்டம் கள்ளிமேடு – கரூர் சுக்காலியூர் ….. இப்படி பல ஊர்களில் இரு தரப்பு மக்களுக்கும் சமாதான சூழல் உண்டாக்கிட இந்து மக்கள் கட்சி சார்பில் அந்த ஊர்களிலே தங்கியிருந்து ஒரு சிறு அணில் போல உதவினேன்.

மேலும் ஒவ்வொரு திருக்குலத்தார் மக்களுக்கு திருக்குலத்தார் திருப்பாத வழிபாடு செய்து வருகிறேன் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

ALSO READ:  நடிகர் விஜய்யும் திராவிட மீடியாவும்!

ஆனால் மதுரை சந்தையூர் பிரச்சினையில் அருந்ததியின மக்கள் _ பறையர் சமூக மக்களின் ஆதிக்க மனப்பான்மையால் _ இக்கொடுமை கண்டு -நாங்கள் முஸ்லீம்களாக மாறப் போகிறோம் என்ற அறிவிப்பு மிகுந்த மன உளைச்சலை தருகிறது.

களத்தில் பறையர் சமுதாய மக்களுக்கும் விடுதலை சிறுத்தைகளும் -அருந்ததியர் சமுதாய மக்களுக்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல இயக்கங்கள் போராடுவது என்பது சரியான தீர்வை நோக்கி செல்லாது.

இந்த சந்தையூர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்றி
அதில் குளிர் காய நினைப்பவர்
எவிடென்ஸ் – அமைப்பின் கதிர் என்ற கிறிஸ்தவர்.

மதுரை மாவட்ட ஆட்சியரும் – தமிழக அரசும் தெளிவான _உறுதியான பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க தயங்குவதும் – காலம் தாழ்த்தி வருவதும் இல்லாமல் உடனடியாக தலையிட வலியுறுத்தி கடந்த 17.03 2018 அன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அய்யா
திரு.முருகன் அவர்களிடம் மனு அளித்துள்ளோம்.

சட்டம் – நீதிமன்றம் .போராட்டம் – ஆர்பாட்டம் ….. இப்படி பல செய்தாலும் தீர்வுக்கு இரு தரப்பு மக்களும் -அந்த சந்தையூர் மக்கள் மகிழ்வோடு வாழ தாங்கள் இரு தரப்பினரையும் சந்தித்து பேசிட வேண்டி அன்புடன் அழைக்கிறேன் .

ALSO READ:  கட்சி மேடையில் விஜய்! நடிப்பைத் தவிர வேறு உண்டா?

மதமாற்றம் நடக்காமல் தடுத்திட_ பேசி – அனைத்து மக்களின் உரிமைகளும் – உணர்வுகளும் மதிக்கப்பட்டு சுமூக தீர்வு காண அண்ணன் விரும்பினால் துறவியர் பெருமக்களை உடன் அழைத்து வர தயாராக இருக்கிறேன்.

நன்றி

என்றும்
தங்கள்
இராம. இரவிக்குமார்
இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.