spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryகண்ணகி பிறந்தது எங்கே? ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை! சிலப்பதிகாரம்கூட தெரியாமல் தமிழன் என்று சொல்ல வெட்கமாக...

கண்ணகி பிறந்தது எங்கே? ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை! சிலப்பதிகாரம்கூட தெரியாமல் தமிழன் என்று சொல்ல வெட்கமாக இல்லை..?!

- Advertisement -

மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைக் குறித்துக் கூறியதாக ஒரு வீடியோ வாட்ஸப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

அதில், நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடி என்றும், அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் கூறுவதாகவும் அந்த வீடியோவில் உள்ளது.

அதில் சான்றோரும் ஒன்றுகொல்.. சான்றோரும் உண்டு கொல் என்று காற் சிலம்போடு நீதி கேட்டு கண்ணகி பிறந்த இந்த மதுரை மண்ணில் நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடியின் உடைய ஆட்சியில் அப்புறப்படுத்த வேண்டும்… – என்று பேசுகிறார் ஸ்டாலின்.

இருப்பினும், சான்றோரும் ஒன்றுகொல் சான்றோரும் உண்டுகொல் என்று மாற்றி மாற்றிப் பேசும் மு க ஸ்டாலினுடைய இந்த வீடியோ ஏதோ ஒரு குழுவினரால் எடிட் செய்யப்பட்டது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது! காரணம், இதில் ஸ்டாலின் பேசும்போது நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடி என்று வரும் இடத்தில் மட்டும் அவருடைய உதட்டு அசைவுக்கும் சொல்லும் வார்த்தைக்கும் ஒத்திசைவு இல்லாமல் இருக்கிறது! ஆகவே இது எடிட் செய்யப்பட்டு பரப்பப் படுகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது!

ஆனால் இதில் ஒரு விஷயம் கண்ணகி பிறந்த இடம் மதுரை என்று அவர் கூறுவது மட்டும் தெளிவாக இருக்கிறது. அவருடைய உதட்டசைவில்!

ஆனால் கண்ணகி பிறந்தது பூம்புகார் நகரத்தில். பூம்புகார் நகரின் மிகச்சிறந்த வணிகராகத் திகழ்ந்த மாசாத்துவான் என்பவரின் மகளாக கண்ணகி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறார்

இப்படி சிலப்பதிகாரத்தை படித்த மு க ஸ்டாலின் மதுரையிலிருந்து கொண்டு மதுரையில் பிறந்த கண்ணகி என்று தப்பும் தவறுமாக உளறிக்கொட்டிச் சென்றது, கேட்பவர்கள் எவருக்கும் தெரியவில்லை! புரியவில்லை!

ஏன் என்றால் அவர்களுக்கும் சிலப்பதிகாரம் தெரிய வாய்ப்பில்லை! அந்த அளவுக்கு திமுக தமிழகத்தின் இந்தத் தலைமுறை தமிழர்களை வளர்த்திருக்கிறது!  களை வளர்த்திருக்கிறது. பயிர்கள் வாடிப் போய் கவனிப்பாரின்றி!

திமுக., தமிழர் இலக்கியம் என்று சிலம்பைச் சொல்கிறது. ஆனால், சிலம்பின் பல பகுதிகளை கிண்டலும் கேலியும் செய்து அசிங்கப்படுத்தியவர் திக., தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

தமிழ் இலக்கியங்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க விடாமல் செய்தது இந்த திமுக தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது!

[videopress dKG5hLLn]

1 COMMENT

  1. Bulk of the Tamilians do not know tamil properly. They were all easy going unappreciative of literatures and above all crazy. Stalin has never learned the language properly.This was evident from the speeches given by him nor was he shrewed to cover up. As I have in the past written that tamilians are not well educated , they were not in a position to question Stalin in Kannagi episode. The rulers of TN were very clever to blunt the brains of people by offering cheap liquor, cinemas and other free gifts. They have also found many ways to cheat the people in admission in professional colleges by bribe method. So we cannot expect quality men in TN. It is also pertinent that all the medias have been preaching what were suitable to the owners views and this invariably the criticism of Ruling govts. They are all hiding the news from either North India or the world to keep the people idiots.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe