உன்னி அப்பம் :
பச்சரிசி மா – 1 கப்
கரைத்த வெல்லம் – அரை கப்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
வாழைப்பழம் = பாதி பழம்
செய்முறை :
பச்சரிசி மாவுடன் கரைத்த வெல்லம்,ஏலக்காய், பழம் ஆகியவற்றை கட்டியில்லாமல் கரைத்து அப்பக்குழியில் விட்டு மிதமான தீயில் வெந்து எடுக்கவும்.மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.வெல்லச்சீடை :
பச்சரிசி மா – 1 கப்
வெல்லப்பாகு – அரைக்கப்
ஏலக்காய் – 1 சிட்டிகை
எண்ணெய் – பொறிக்க
செய்முறை :
இளம்பாகுடன் பச்சரிசி மா ஏலக்காய் கலந்து உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொறிக்கவும் தீயை மிதமாக வைத்து செய்யவும்.உப்புச்சீடை ;
பச்சரிசிமாவுடன் உப்பு,சீரகப்பொடி,வறுத்த உளுத்தம் பொடி கலந்து வெண்ணெய் சிறிது கலந்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்.
குறிப்பு ;
இதில் தண்ணீர் அதிகமாகிவிடக்கூடாது, உளுத்தம் பொடியும் 2;1 என்ற விகிதத்தில் இருக்கவேண்டும். உளுத்தம் பொடி அதிகமானால் சீடை வெடிக்கும். இதனை எண்ணெய்யில் மிக நெருக்கமாக போட வேண்டும். ஒரு புறம் கொதி அடங்கும் வரையில் அகப்பை கொண்டு கிளறக்கூடாது. தேங்காய் சீடை ;
பச்சரிசி மா = 1 கப்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்துருவல் – முக்கால் கப்
எண்ணெய் = தேவையான அளவு
செய்முறை ;
பச்சரிசிமாவுடன்,உப்பு,தேங்காய்துருவல் கலந்து பிசையவும்.இதில் தண்ணீர் விடக்கூடாது. தேங்காய் துருவலில் உள்ள ஈரப்பதம் கொண்டே சீடையை உருண்டைகளாக உருட்டி போடவும்.மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.
காப்பரிசி :
இது குழந்தை பிறந்த வீட்டில் சிறப்பு பதார்த்தமாக செய்யப்படும் இனிப்பு ஆகும்.
பொரிகடலை – 1 கப்
வெல்லம் – அரைக்கப்
பச்சரிசி = ஒரு பிடி
செய்முறை :
வெல்லத்தை நல்லபாகு வைக்கவேண்டும். அதாவது வெல்லம் கரைந்து தண்ணீரில் விட்டுப் பார்த்தால் உருண்டு வரவேண்டும். அப்படி வந்தவுடன் பொரி கடலையையும்,அரிசியையும் போட்டு கிளறி இறக்கவும்.
அனைவருக்கும் தினசரியின் கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.