வாழைப்பூ அடை
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ – 1
உளுத்தம் பருப்பு. – 100 கிராம்
பச்சை பயறு – 100 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு. – தேவைக்கு
பெருங்காய பொடி. – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவைக்கு
செய்முறை: உளுத்தம் பருப்பு, பச்சைபயறு, அரிசி போன்றவைகளை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். பின்பு அத்துடன் காய்ந்த மிளகாயை சேர்த்து அரையுங்கள்.வாழைப்பூவை சிறிதாக நறுக்கி, அரைத்து வைத்துள்ள மாவில் கலந்திடுங்கள். அத்துடன் உப்பு, பெருங்காய பொடி கலந்து தேவையான அளவு நீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.,
சுவையான வாழைப்பூ அடை தயார்.
இது ஒரு சுவையான சிற்றுண்டி. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நார்ச்சத்து மிகுந்த சத்தான உணவு. கருவுற்ற பெண்களுக்கு ஏற்றது