நொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.
தேவையான பொருட்கள்:
அரிசி நொய்–2 கப்
புளி—ஒரு கெட்டியான பெரிய நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு—வகைக்கு 2டீஸ்பூன்கள்
மிளகாய்வற்றல்—3
வெந்தயம்–கால் டீஸ்பூன்
பெருங்காயம்–ஒரு சிறிய கட்டி
ருசிக்கு—உப்பு
தேவைக்கேற்ப—வெங்காய, பூண்டுத் துண்டங்கள்
கறிவேப்பிலை—10 அல்லது 15 இலைகள்
சிறிது மஞ்சள்ப் பொடி
செய்முறை—
நாம் இதை ரைஸ் குக்கரிலேயே செய்வோம். மிகவும் சுலபம்
அரிசி நொய்யைக் களைந்து அறித்தெடு்த்து தண்ணீரை
வடிக்கட்டவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து 2,3 முறை தண்ணீர் விட்டுக்கறைத்துச் சக்கையை நீக்கவும். புளித்தண்ணீரை அளந்து விடவும். மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு நொய்யிற்கு 3 பங்கு தண்ணீரென மொத்தக் கணக்கில்
அளந்து விடவும்.
வாணலியில் நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு,வெந்தயம்,மிளகாய்,
பருப்புகள், பெருங்காயம் இவைகளைத் தாளித்துகறிவேப்பிலை,பூண்டு,
வெங்காயத் துண்டுகள் இவைகளையும் சேர்த்து வதக்கி புளித்தண்ணீருடன்
கூடிய நொய்யில் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து ரைஸ் குக்கரில் இவைகளை மாற்றி குக்கரை ஆன் செய்யவும். பதமாக வெந்து முடிந்ததும், குக்கரைத் திறந்து கரண்டிக் காம்பினால் வெந்த கலவையை நன்றாகக் கிளறி மூடவும்.
5 நிமிஷங்கள் கழித்துத் தயாரான புளிப் பொங்கலை சுடச்சுடப்பகிர்ந்து உண்ண வேண்டியதுதான்.
புளி, காரம் இரண்டுமே அதிகப்படுத்தலாம். இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கலாம். வேர்க்கடலை தாளிக்கலாம். ரிச்சாக தயாரிப்பதானால்
இருக்கவே இருக்கிறது முந்திரி.
பாஸ்மதி அரிசியின் நொய் ஆனால் 2 பங்கு தண்ணீர் போதும்.