மைசூர் மசாலா தோசை
தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி
1 கப்இட்லி அரிசி
¼ கப் உளுந்து
1 மேஜைகரண்டி கடலை பருப்பு
1 தேக்கரண்டி வெந்தயம்
1 மேஜைகரண்டி ஈஸ்ட்
தேவையானஉப்பு
1 தேக்கரண்டி சக்கரை
½ கப் நல்லெண்ணை
மசாலா:
1/2 கப் கடலை பருப்பு
1/4 கப் உளுந்து
1 மேஜைகரண்டி தனியா
1 தேக்கரண்டி சீரகம்
20 காரமிளகாய்
1 தேக்கரண்டி பெருங்காயம்
தேவையானஉப்பு
1 மேஜைகரண்டி இஞ்சி, தோலுரித்து நறுக்கியது
15 பல் பூண்டு
10 காம்பு கறிவேப்பிலை
செய்முறை
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் 2 மேஜைகரண்டி நல்லெண்ணெய் சூடான பின் கடலை பருப்பு, உளுந்து, சீரகம் சேர்த்து வறுக்க; பருப்புகள் பொன்னிறமானதும், தனியா, காரமிளகாய், சேர்த்து வறுக்க. இஞ்சி, 5 பல், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க. பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைக்க. வறுத்த பொருட்களை நீர் சேர்த்து மிக்ஸியில் அறைத்து பேஸ்ட் செய்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் 2 மேஜைகரண்டி நல்லெண்ணெய் சூடான பின் மீதி பூண்டு பல்களை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்க- சிறிது பிரவுன் ஆன பின், பேஸ்ட் சேர்க்க. உப்பு சேர்க்க. ஒன்று சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. மைசூர் மசாலா தயார்.
தோசை செய்ய: மிதத்தீர்க்கும் சிறிது அதிகமான (medium high) நெருப்பின் மேல் தோசை கல்லின் மேல் எண்ணை தடவுக. மாவுடன் சக்கரை கலந்து 1 கப் மாவை கல்லின் மேல் ஊற்றி மெல்லியதாக தோசை செய்க, நெருப்பை குறைக்க. மூடுக. 2 பக்கமும் வெந்து விடும். தோசை மேலே மசாலா பேஸ்ட் தடுவுக,
ருசி பார்க்க, மசாலா தோசை பரிமாற தயார்.