தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வம். ஜோலார்பேட்டையில் கார் வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வம் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வீட்டிலிருந்து வந்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் லாவண்யா தூக்கில் தொங்கினார். இதனைக் கண்ட செல்வம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.