தனது மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஸ்ராக் கிராமத்தில் பீஷம் அவரது அண்ணன் தீபக் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். குடிப்பழக்கம் உள்ள பீஷம் ஊரில் எல்லோரிடமும் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர்.
இந்நிலையில் குடித்துவிட்டு வந்த தனது அண்ணியிடம் அத்துமீறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தீபக் தனது தம்பியை கொலை செய்து சாலையோரம் வீசிவிட்டு சென்றார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பீஷம்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீபக் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.